Translate

Friday, February 1, 2013

ஓ.... கடவுளே!

தனது கணவரை இழந்த எமது சகோதரி திருமதி.பிரபாவதி ஜெனார்தனம் அவர்களின் கதறல்.




சுற்றம் சுற்றியே இருந்தாலும்,
உற்றத்துணையை ஏன் பிரித்தாய்?
மன்னிக்கா குற்றமென்ன?
மரணிக்க செய்ததென்ன?

வெளிச்சமும் இருட்டும்
வாழ்வின் நியதிதான்.
விரைவிலே இருள செய்து,
நிலை குழைந்து நிற்க செய்தாய்.

விழியிழந்த முடவரைப் போல்
வழியின்றி முழிக்கின்றேன்.
இடைவிடாமல் பிரார்த்தித்தேன்- ஏன்
இடையிலே உறவை  துண்டித்தாய்?

நிற்கதியாய் நிற்க வைத்தாய்
வேடிக்கைப் பொருளாய் எனை மாற்றி.
சோதனையை செய்து விட்டாய்.
வேதனையில் தவிக்க விட்டாய்.

வாழ்வின் துணை உடனிருந்திருந்தால்,
பயின்றிருப்பேன் என் நடையை,
தும்பிக்கையாய் நம்பிக்கையுடன்
நின் அருள் துணைக் கொண்டே.

நின் அருளோ மறைந்ததம்மா.
என் துணையை இழந்தேனம்மா.
திகைத்துத்தான் நிற்கின்றேன்
வழிப்பாதைத் தெரியாமல். 

No comments: