

உங்களைத்தான்....
எள்ளியாட நினைக்கின்றேன்.
எள்ளி நகையாடுகிறீர்களே, என்னையே
கண்களை சமிட்டி.
கணக்கும் பிணக்குமோ, உங்களை
கணக்கிடத் தொடங்கியதால்.
வான்வெளியைத் துளைத்து
சல்லடைப்புள்ளிகளாய் நீங்கள்.
புரியா வயதில் புதிராய் இருந்தீர்
கணக்கு இடுவதில் தான்.
புரிந்த வயதிலும் புதிராய் இருக்கிறீர்
உங்களை அறிந்துக் கொள்வதில் தான்.
நிலவைக் காட்டிய தாய்
ஏன் மறந்தால் உங்களைக் காட்ட.
தாரகைகளான நீங்கள்
பெண்ணென பெயரெடுத்ததாலும்
அழகாய் கண் சிமிட்டுவதாலுமோ?
பகலில் வெளிச்சப்புள்ளிகள்
என் ஓலைக்குடிசையில்.
ஓர் உணர்வு - என்றுமே
நீங்கள் என்னுடன் இருப்பதாய்.
அந்தரத்தில் தொங்குகிறீர்
எங்கோ மறைகிறீர் எரிநட்சத்திரமாய்.
நினைத்துக் கொள்வேன்
நானும் என்றாவது ஒரு நாள்.........
- நெகிழ்ந்த உள்ளங்களின் கருத்து பகிர்வுகள்:-
Dhavappudhalvan Badrinarayanan A M @Sankara Subra Manian:- நன்றி நண்பரே. மாலை வணக்கம்.February 20 at 4:58pm ·
Sylvia Velanganni அருமை தவா சார்...நிலவைக் காட்டிய தாய்
ஏன் மறந்தால் உங்களைக் காட்ட.February 20 at 7:43pm · · 1 person
Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
அருமை. வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்திFebruary 20 at 8:48pm · · 1 person
வீரபாண்டியன் Veera நல்ல கவிதை தவப்புதல்வன் சார் , கற்பனையை மீறி ,உண்மையை கவிதையாய் வடிக்க ஒரு தனிதிறமை வேண்டும் அது உங்களிடம் அளவிட முடியாமல் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.February 20 at 9:46pm · · 2 people
Shanmuga Murthyநினைத்துக்கொள்வேன்
என்றாவது ஒருநாள்....
ஆம்.
அந்த விண்மீன்களில்ஒன்றாய்.February 20 at 10:58pm · · 2 people
Keyem Dharmalingam நண்பரே தவப்புதல்வன் அவர்களே !
அருமைநண்பரே !!
அருமை நண்பரே!!!February 20 at 11:23pm · · 1 person
Sathiabama Sandaran Satia arumai badri sir.. natcathirampol minnugirathu unggal kavi varigal... beautiful!!!February 21 at 7:11am · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @ Sylvia Velanganni:- "நிலவைக் காட்டிய தாய்
ஏன் மறந்தால் உங்களைக் காட்ட."
தாயிக்கு நம்மை அறிமுகம் செய்து வைக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கும். முகநூல் தான் நம்மை அறிமுகம் செய்து வைத்து விட்டதே.February 22 at 8:03pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @ வீரபாண்டியன் Veera:- "உங்களிடம் அளவிட முடியாமல் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன்."
போச்சிடா! இருப்பதாய் காட்டிக் கொள்ள தோண்ட வேண்டியது தான்.February 22 at 8:06pm ·
Dhavappudhalvan Badrinarayanan A M @ Sathiabama Sandaran Satia:- " natcathirampol minnugirathu unggal kavi varigal.''
என்னது நட்சத்திரம் போல என் கவி வரிகள் மின்னுகிறதா? புகைப்படத்தை பார்த்து விட்டு கவி வரிகள்னு சொல்லிட்டிங்களா?. ஆனாலும் சந்தோசம், நீங்க சொன்னதை படிச்சு.February 22 at 8:16pm ·
Shanmuganaathan Venkata Kandar Swaminathan தன் வாழ்வில் நட்சத்திரங்களை எண்ணி பார்க்காதவர் யாரேனும் இருக்கின்றனரா?.... அப்படி மல்லாக்க படுத்து எண்ணும் சமயங்களில் புதிது புதிதாய் கண்ணுக்கு தெரிந்து கணக்கை குழப்பும் சிறு நட்சத்திரங்கள். இந்த வின் ஆராய்ச்சி வாழ்வின் ஒரு மிக சிறிய நிகழ்வாக இருந்தாலும் அதை நினைத்து பார்க்க வாய்த்த கவிதை. வாழ்த்துகள் அண்ணா..!February 23 at 8:06pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @ Shanmuganaathan Venkata Kandar Swaminathan :- தம்பி, முதலிலே ஒன்றை சொல்லி விடுகிறேன். உங்கள் பெயரில் உம்மை அழைக்க எந்த பெயரை எடுத்துக் கொள்வதென்று குளம்பி விட்டேன். அடுத்து இப்பொழுதுள்ள இளையதலைமுறையினர் மிக மிக குறைந்த அளவினர் தான் நட்சத்திரங்களை எண்ணும் வாய்ப்புடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களெல்லாம் வீட்டிற்குள் சின்னத்திரைக்கு முன்தான் அடக்கம். இளமைகால நினைவுகளை அசைப்போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.February 23 at 10:26pm ·
Shanmuganaathan Venkata Kandar Swaminathan @ Dhavappudhalvan Badrinarayanan A M : Annaa..! You can call me shan..February 23 at 10:59pm ·
Shanmuganaathan Venkata Kandar Swaminathanஅண்ணா..பலரும் குழம்பும் விஷயம் என்னுடைய பெயர். என்னுடைய பெயர் V .S .SHANMUGANAATHAN . பாட்டனார் வேங்கட ...மற்றும் தகப்பனார் சுவாமிநாதன் முதலியோர்களுடைய பெயர்களை இனிஷியலாக கொண்டுள்ளேன். என்னுடைய ஒன்று விட்ட சகோதரர் எங்களுடைய ஊர் பெயரான நஞ்சை இடையார் என்பதையும் பெயருக்கு முன் கொண்டுள்ளார். 'தில்லு முல்லு' படத்தில் வரும் 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' போலத்தான்.February 23 at 11:09pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A Mஹா..ஹா....ஹா..... விளக்கத்துடன் அருமையான ஒப்புவமை. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இரவு வணக்கம் தம்பி.February 23 at 11:14pm · · 1 personநேசித்த உள்ளங்களின் விருப்பக் குறிகள்:-



2 comments:
என்றுமே
நீங்கள் என்னுடன் இருப்பதாய்
இருக்க வேண்டும் அப்படியே
Post a Comment