Translate

Tuesday, February 15, 2011

செல்வம்



தேடி வந்த செல்வமெல்லாம்
சொல்லாமல் போனதைய்யா.
தேடித்தேடி பார்க்கிறேன்
கண்ணாமூச்சி காட்டுதைய்யா.

இன்று நாளை என்று அது
நாட்களெல்லாம் போகுதைய்யா.
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோனுதைய்யா.

தோல்விகளால் பட்ட காயம்
தீப்பிளம்பாய் எரியுதைய்யா.
வெற்றிப்படியைத் தொடும்போது
வீரத்தழும்பாய் தெரியுமைய்யா.

இன்றேயென சொல்லியே
விரைவாய் முடிவுகள் காண்வேனே.
நினைத்ததை முடித்து நான்
வெற்றியை அடைவேனே.

வெற்றியில் குடும்பமதை
மகிழ்வடைய செய்வேனே.
குடும்பமுடன் சேர்ந்து நான்
நம்பிக்கையைத் தருவேனே.
(கலகலப்பாய் இருப்பேனே)......

2 comments:

Anonymous said...

குடும்பத்துடன் சேர்ந்து நம்பிக்கையாய், கலகலப்பாய் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

Dhavappudhalvan said...

மிக்க மகிழ்ச்சி சகோதரி, தங்கள் வாழ்த்து கருத்துக்கு.