Translate

Thursday, December 9, 2010

என்று மாறுமோ இந்நிலை?


உழைத்தானே 100 கூலி பெற்றிடவே

70ஐக் கொடுத்தானே கால்மதுவைப் வாங்கிடவே

உடன் கொரித்தான் 20ஐ செலவழித்து

தட்டெடுத்த சிறுவனுக்கு 10ம் கொடுத்தான்

பாசமுள்ள வள்ளலைப் போல்.


தன்னிலை மறந்தவனாய்

தள்ளாடி நடந்தானே

தன் வெறும் கையை வீசிக் கொண்டு.

தரங்கெட்ட அவன் செயலால்,

தகிக்கின்ற வயிறோடு,

தந்தை வருகைப் பார்த்திருந்த

தவமிருந்து பெற்றத்

தன் குழந்தைகளின் பசியாற்ற

தண்ணிரை கொடுத்தணைத்திடவே

தாங்கொண்ண துயரத்துடன்

தாயவள் எழுந்தாளே துடித்தப்படி.

பின் குறிப்பு:-
இதற்கேற்ற சரியான இந்திய தமிழ்நாட்டின் குடிமகன் புகைப்படம் கிடைக்கவில்லை.

No comments: