

புத்தாண்டு விழா என
புதுமையாய் கொண்டாட
வேண்டாம் அம்மணம்
வேண்டுமே அமைதி.
சீர்படச் செய்ய
சீரிய சிந்தனை
செயலிலே திறமை
செய்வோம் உணர்ந்து.
உலகைக் காக்க
உன்னத செயல்கள்
கற்பூரமாய் எரிந்து
கடமையை செய்வோம்.
அன்பைக் காட்டி
அரவணைத்துக் கொள்வோம்.
புரிந்துக் கொண்டு
புனரமைத்துக்கொள்வோம்.
நண்பராய் நாடினோம்
நயம்பட உரைக்க.
புத்தாண்டு முதலே
புது வாழ்வு மலர,
இனி வரும் நாட்களெல்லாம்
இன்பமாய் தொடர,
வாழ்த்தினோம் உமையே
வளமும், நலமும் என்றுமே நிலைக்க.
அன்புடன்,
தவப்புதல்வன்.
தவப்புதல்வன்.