Translate

Monday, April 26, 2010

நண்பர்.கிறுக்கனாருக்கு பிறந்த நாள் வாழ்த்து.


கற்பனையில் மிதக்கும் நேரமிதில்

காலமும் விரைவாய் கடந்து விடும்.

கருத்திலே கொண்டு இருந்தால்தான்

கனிவான குடும்பமும் மலர்ந்துவிடும்.

மகிழும் நினைவுகளில் ஒன்றிதுவாய்

மனத்தினில் தங்கி நிழலாட

பிறந்ததை எண்ணிப் பார்த்திடவும்

பிறந்த நாளும் இருக்குதுவே.

மகிழ்வுகள் பூக்கும் நிகழ்வுகளாய்

மங்கா நினைவுடன் அதுவிருக்க,

மகிழ்ந்தே உம்மை வாழ்த்துகிறோம்

மாளா பெருவாழ்வு வாழ்கவென்று!!!..........

நண்பன்,

-தவப்புதல்வன்.

பின்குறிப்பு:

வலை (வளைத்த) நண்பர்.திரு.கிறுக்கன் @ பாலு @ பாலசுப்ரமணியம் கணபதி அவர்களின் ( 53 ஆ 54 ஆ? ஏதோ ஒன்னு.) பிறந்த நாளுக்கு (Apr 27) மனசிலே தோன்றிய எண்ண வடிவம். சென்னையிலிருந்து ஹூப்ளிக்கு.

2 comments:

c g balu said...

உய்யா உய்யா!
முதலில் பாராட்டுகள்.
பிளாக்கை பிளாக்கில் புகுத்தியமைக்கு.
இரண்டாவது நன்றிகள்
நெகிழ்சியான கவிதைக்கு.
படத்துடன் மிக அருமையாக செய்துள்ளீர்கள்

Dhavappudhalvan said...

நினைத்தேன் வந்தீர்... நூறு வயது.