Translate

Tuesday, October 30, 2007

ஒழுகுமே

ஒவ்வொரு துளியும்
ஒரு கதைச் சொல்ல
ஒப்புமையில்லா நிசமாக
ஒய்யாரமாய் உன் குரலோசை
ஒழுகுமே தேன் சுவையாய்।

ஒலிப்பெருக்கி வாய் மூலம்
ஒலி வாங்கி செவி வழியே
ஓய்ந்திருக்கும் நாட்களெல்லாம்
ஒப்பனைகள் ஏதுமின்றி
ஒலியலைகள் சென்றடையும்
ஓய்வின்றி நம்மிடையே !.

No comments: