Translate

Thursday, May 31, 2007

உங்களுடன் ஒரு அலசல்

ஆறு,கடற்கரை ஓரங்களில், மணற்பரப்பில் சிறுமணற்குழிகளைத் தோண்டி, சுவையான ஊற்றுநீர் எடுத்தும், குடித்தும் பார்த்திருப்பீர்கள். நீர் எடுக்க எடுக்க புது நீர் ஊறுவது போல,

தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. - 396 .

என்னும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றுப்படி, நமது உடலானது மணற்கேணிப் போல, குறிபிட்ட காலத்திற்கு, ஒரு முறை குறிப்பிட்ட அளவு இரத்தம் எடுக்க எடுக்க புது இரத்தம் ஊறிக்கொண்டே இருக்கும்.
புது இரத்தமானது நம்மை சுறுசுறுப்புடனும், புத்துணர்வுடனும் வைத்திருக்கும். 16 வயதிலிருந்து 60 வயது வரை அனைவரும் 3 மாதததிற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். உடல் நிலை சரியில்லாதவர்களும் மருத்துவர் ஆலோசனைப்படி இரத்ததானம் செய்யலாம்.

'புத்துணர்வுடன் வாழுங்கள்'
'புத்துயிர் பெற உதவுங்கள்'

அதே போல் தான் உடல் மற்றும் கண் தானமும். இந்திய நாட்டில் வருடத்திற்கு 2 இலட்சம் பேர் கண்களை இழக்கிறார்களாம். கிடைப்பதோ, 20 ஆயிரம் ஜோடி கண்கள்தானாம். என்னடா ரொம்ப சீரியஸ் மேட்டராக எழுதுகிறாரே என நினைக்க வேண்டாம். மேட்டர் சீரியஸ் தானே. போக போக ஜாலியாக.

சரி தானே !

No comments: