Translate

Sunday, May 27, 2007

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

விண்ணிலே பரிதியோட
நிலவுமுகம் கொண்டவனை
நற்தமிழில் முழக்கமிட
மண்ணிலே ஈன்றெடுத்தாள்.

உலகமக்கள் யாவருமே
சான்றோன் என அழைத்திடவே
மனமகிழ செவி மடுத்திருந்திருப்பாள்
சுமந்த வலி மறந்து அவள்.

தாயவள் வழி காட்ட, - அன்று
நீ பின் தொடர்ந்தாய். - இன்று
வழித்தொடர செய்கிறாய்
வாரிசுகளை உமைத் தொடர்ந்தே.

வாழிய பல்லாண்டு பல்லாண்டு
நலமாய் வளமாய் வாழியவே.
இறைவனை பிரார்த்தித்தே வாழ்த்துகிறோம்
இனிய உம் பிறந்த நன்னாளிலே.

No comments: