குறையொன்றுமில்லை
++++++++++++++++++++++
குறை உருவாய் இருந்தாலும்,
மனத்திலே சேதமில்லை
மூளைக் காட்டிய வழியாலே,
கற்றுக் கொண்ட தொழிலாலே,
மூலைக்குள் முடங்கவில்லை,
வாழ்வதற்கும் அச்சமில்லை.. 15
படைப்பினிலே சமமென்றால்…
ஈர்ப்பதற்கு ஒன்றுமில்லை.
ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்
எதிர் நீச்சல் நாம் அடித்தால்….
வெற்றியும் வசமாகும்.
பிறப்பிற்கும் பொருளாகும். 29
சீரற்ற வண்ணங்களால்
சிந்தனையை கவர்வதில்லை.
சித்திரமாய் உருவமைத்தால்
சிலிர்க்கவே செய்து விடும். 37
முடியாத குறைகளுண்டு
சிறப்பான செயல்களுண்டு.
ஆதாரம் அதற்குண்டு
ஆழ்ந்திட்டால் வெற்றியுண்டு.
அறிந்திடுங்கள் அதைக்கண்டு. 48
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏
No comments:
Post a Comment