Translate

Thursday, January 5, 2012

வளம் கவிஞன் வாழியவே!

நண்பர் பணிநிறை தமிழ் ஆசிரியர் திரு.கொ.இராமலிங்கம் அவர்கள், எமது கவிதைகளில் ஒரு தொகுப்பை வாசித்து விட்டு வாழ்த்துக்கவிதை ஒன்றை எம்மை வாழ்த்திக் கொடுத்தார். உங்கள் கருத்துகளுக்காக, மகிழ்வுடனும் நன்றியுடனும் அவ்வாழ்த்துக் கவிதையை கீழே பதித்துள்ளேன்.
வளம் கவிஞன் வாழியவே!
வண்ணக் கவிதை வாழியவே!!

பழகும் இனிய பண்பாளன்
பத்ரி நாரா யணன் எனும் - பேரோன்
எழுதி கோர்த்த கவிமலர்கள்
இனிக்கும் இன்பத் தமிழ்மாலை
தனிமைத் தவிப்பு இதிலுண்டு
தள்ளா வயதின் நடையுண்டு
வாலிபத் துள்ளல் வரியுண்டு
வாழத் துடிக்கும் மனமுண்டு.
மனங்களின் வரிசைப் பாடுண்டு.
மணக்கும் உவமைச் சுவையுண்டு.
குறளின் சாயல் வடியுண்டு
குரும்புக் காரத் தனமுண்டு
இன்பம் துன்பம் இணைந்திருக்கும்
இல்லறம் இனிக்கும் வழியுண்டு.
இயலா மக்கள் வாழ்நிலையின்
இயம்பும் இலக்கியச் சாறுண்டு
கற்பனை சிறிது கலந்திருக்கும்
காணும் இயற்கை வளமிருக்கும்
மானுட வாழ்வின் மயக்கமதை
மணக்கும் கவியாய் வடித்துள்ளீர்
வளரும் கவிஞன் உமை அன்பால்
வாழ்த்தி மகிழ்ந்து போற்றுகின்றேன்.
அன்பன்
கொ.இராமலிங்கம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://www.facebook.com/notes/dhavappudhalvan-badrinarayanan-a-m/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87/278095862248752


முகநூளில் [Face Book] கருத்திட்ட நண்பர்கள்.

    • Vetha ELangathilakam Glad and again vaalthukal.....valarka!.....
      January 5 at 12:09pm · · 2

    • Sadeek Ali Abdullah எங்கள் மனம் வாழ்த்தும் எதிரொலியாகவே ஆசிரியர் திரு கொ. இராமலிங்கம் அவர்களின் இப்பாராட்டுக் கவிதையை உணர்கிறேன்... அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
      January 5 at 12:12pm · · 2

    • Keyem Dharmalingam விடாமுயற்சியின் வேட்கையுமுண்டு தங்களிடம் இனிய நண்பரே!! தவப்புதல்வன் பத்ரிநாராயணன் அவர்களே!! வாழ்த்துக்கள்!!!
      January 5 at 12:28pm · · 2

    • Sankar Mani Iyer நெசந்தானுங்களே குழம்பியகத்து மணமக்கள் எவ்வலவோஒவ் நாள் அங்கேயே ஒட்காந்திருந்தாங்க இந்த பெரிசுகளானு இங்கிதம் பாத்து எடத்தை காலி பண்ண வேணாமா. இல்லியே.. நடப்பது மட்டும்தான் நடையா நடக்க வைப்பதும் நடைதானே நண்பரே. ஒங்களுக்கு நன்றி பகிர்வு குறித்து. அவுருக்கு நன்றி பாராட்டு குறித்து.Dhavappudhalvan Badrinarayanan A M
      January 5 at 5:15pm · · 2

    • Jayaraj Jesu அருமையாகத்தான் வாழ்த்தி இருக்கிறார் உங்கள் நண்பர்,
      தவப்புதல்வன் சார் !!
      January 5 at 7:15pm · · 2

    • Dhavappudhalvan Badrinarayanan A M மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! விரைந்த கருத்து பகிர்வுக்கு. எம்மைப் பாராட்டியதை வெளியிட்டு பெருமைப் பட்டுக் கொள்வதை விட, தமிழ் ஆசிரியர் பணியை நிறைவு செய்த நண்பர் கொ.இராமலிங்கம் அவர்கள் சிறந்த மேடைப் பேச்சாளரும், நாட்டுப்புற பாடல் கவிஞரும் கலைஞரும் ஆவார். அப்படிப்பட்ட சிறந்த நண்பரை பெருமைப் படுத்தவே வெளியிட்டேன்.

    • Kanniah Gopalakrishnan இன்றுபோல் என்றும் வாழ்க வளமுடன் எங்களின் இனிய கவியரசரே !
      January 6 at 7:44am · · 2

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Kanniah Gopalakrishnan:- நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி.

    • Jayanthy Morais மானுட வாழ்வின் மயக்கமதை
      மணக்கும் கவியாய் வடித்துள்ளீர்
      வளரும் கவிஞன் உமை அன்பால்
      வாழ்த்தி மகிழ்ந்து போற்றுகின்றேன்.....அருமையாக வாழ்த்தி இருக்கிறார் ....
      January 6 at 6:33pm · · 1

    • Dhavappudhalvan Badrinarayanan A M இனிய சகோதரியே,

      இன்புற்றேன்,

      கனியாய் கவர்ந்து

      கருத்திட்ட உமைக் கண்டு.

    • ஒப்பிலான் பாலு நல்ல கவிதைக்கு ..ஒரு நல்ல நண்பர் அழகாக வாழ்த்தி உள்ளார் ..போற்றப்படவேண்டிய ஒன்றுதான் ..!அவருக்கும் ...உங்களுக்கும் வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் !
      January 8 at 9:51am · · 1

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Oppilan Balu Muniyasamy :- mikka mikizvudan nanri nanbare.

முகநூளில் விருப்பக்குறியிட்ட நண்பர்கள்.:-

People who like this

No comments: