சிந்தனையில் சிதறியது
அத்தனையும் உனதென்று
அள்ளித்தான் கொடுத்தேனே
அழகாக சீர்படுத்தி
முறையாக அதை அடுக்கி
முன்வைத்தேன் உன் காலடியில்
கொண்டாட வருவோருடன்
கொலுவிலே வைத்திருந்து
கொண்டாடி மகிழு என்று
கொடுத்து விட்டாய் என்னிடமே.
Translate
Friday, May 21, 2010
ஓ .... நிலா, இரு நிலா, இருளிலா!!!!

எட்டாத உயரத்தில் ஓர் நிலா,
நதியலையில்
தொட்டாலும் கிடைக்காத ஓர் நிலா.
நதிக்கரையில் ஓர் நிலா.
அவள் முகமோ ஓர் நிலா.
அவள் பெயரும் ஓர் நிலா.
ஒளியை பொழியும் அந்த நிலா,
மலராய் மலரும் இந்த நிலா.
மறையும், தேயும் அந்த
நிலா,
மங்கா தங்கமிது இந்த
நிலா.
கவிஞரின் கவிதைக்கு அந்த
நிலா,
காதலனின் காதலுக்கு இந்த
நிலா.
தொட்டாலும் சிவக்காத அந்த
நிலா,
சொல் கேட்டாலே
முகம் சிவக்கும் இந்த
நிலா.
எல்லோருக்கும் சொந்தமது அந்த
நிலா,
எனக்கு மட்டும் சொந்தமிது இந்த நிலா.
Tuesday, May 18, 2010
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைவுக்கு அஞ்சலி
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று (16.5.10) ஞாயிறு அன்று காலமானார். இதுவரை 1000 மேற்பட்ட சிறுகதைகள், 800 மேற்பட்ட நாவல் எழுதுயுள்ளார். பல இல்லத்தரசிகள் விரும்பி வாசித்த நாவல்களில் அனுராதா ரமணனின் நாவல் மிக முக்கியமானது.
இவர் எழுதிய ஒரு சில படைப்புகள் திரை வடிவமும் பெற்றள்ளது. அதில் குறிப்பாக...
சிறை , கூட்டுபுழுக்கள் - ஆர்.சி. சக்தி இயக்கியுள்ளார்.
ஒரு மலரின் பயணம் - முக்தா சினிவாசன் இயக்கியுள்ளார்.
ஒரு வீடு இரு வாசல் - கே. பாலசந்தர் இயக்கியுள்ளார்.
இன்னும் சில படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. 1976 ஆண்டு, எம்.ஜி.ஆர் திரு கரங்களால் 'சிறை' சிறுகதைக்கு தங்க பதக்கம் வாங்கியுள்ளார்.
பதிவர்களின் சார்ப்பாக அனுராதா ரமணன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்போம்.
நன்றிகள்: நண்பர் கவிஞர்.குகன் அவர்களின் புளோக்கிலிருந்து மறுபதிவு செய்து விட்டேன்.
பின்குறிப்பு:
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் ஒருவராவார். தினமலர் வாரமலரில் வெளிவரும் அவருடைய "அன்புடன் அந்தரங்கம்" ஆலோசைனை பகுதியை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
அவரை சந்திக்க விரும்பி, ஒரு கவிதையும் எழுதி, வாரமலர் மூலமாக அனுப்பி வைத்தேன். ஆனால் சந்திக்க முடியாமலே ஆகிவிட்டது. மிக்க வருத்தத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். 2009 பெப்ரவரி 19, ம் தேதி
''அந்தரங்கம்'' என்ற தலைப்பில் இந்த ஆம்பல் மலர் வலைதளத்திலேயே கவிதையை வெளியிட்டுள்ளேன்.
இவர் எழுதிய ஒரு சில படைப்புகள் திரை வடிவமும் பெற்றள்ளது. அதில் குறிப்பாக...
சிறை , கூட்டுபுழுக்கள் - ஆர்.சி. சக்தி இயக்கியுள்ளார்.
ஒரு மலரின் பயணம் - முக்தா சினிவாசன் இயக்கியுள்ளார்.
ஒரு வீடு இரு வாசல் - கே. பாலசந்தர் இயக்கியுள்ளார்.
இன்னும் சில படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. 1976 ஆண்டு, எம்.ஜி.ஆர் திரு கரங்களால் 'சிறை' சிறுகதைக்கு தங்க பதக்கம் வாங்கியுள்ளார்.
பதிவர்களின் சார்ப்பாக அனுராதா ரமணன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்போம்.
நன்றிகள்: நண்பர் கவிஞர்.குகன் அவர்களின் புளோக்கிலிருந்து மறுபதிவு செய்து விட்டேன்.
பின்குறிப்பு:
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் ஒருவராவார். தினமலர் வாரமலரில் வெளிவரும் அவருடைய "அன்புடன் அந்தரங்கம்" ஆலோசைனை பகுதியை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
அவரை சந்திக்க விரும்பி, ஒரு கவிதையும் எழுதி, வாரமலர் மூலமாக அனுப்பி வைத்தேன். ஆனால் சந்திக்க முடியாமலே ஆகிவிட்டது. மிக்க வருத்தத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். 2009 பெப்ரவரி 19, ம் தேதி
''அந்தரங்கம்'' என்ற தலைப்பில் இந்த ஆம்பல் மலர் வலைதளத்திலேயே கவிதையை வெளியிட்டுள்ளேன்.
Wednesday, May 12, 2010
Saturday, May 8, 2010
சிந்தனை செய் மனமே!!!
ஷோபனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து - 2010

வாழ்விலே இனிமை
வந்து உன்னை சேர
சிந்தனை செய் மனமே!
வளமும் புகழும்
உனையே தொடர
சிந்தனை செய் மனமே!
தேடுதல் இல்லா
வாழ்வே இல்லை
சிந்தனை செய் மனமே!
நலமுடன் இளமை
என்றுமே இருக்க
சிந்தனை செய் மனமே!
வாழ்வுடன் மகிழ்வும்
இனிதாய் இணைய
பிறந்த நாள் உனதில்
வாழ்த்தினோம் இனிதே!!!
அன்புடன் வாழ்த்தும்,
அப்பா, அம்மா.

வாழ்விலே இனிமை
வந்து உன்னை சேர
சிந்தனை செய் மனமே!
வளமும் புகழும்
உனையே தொடர
சிந்தனை செய் மனமே!
தேடுதல் இல்லா
வாழ்வே இல்லை
சிந்தனை செய் மனமே!
நலமுடன் இளமை
என்றுமே இருக்க
சிந்தனை செய் மனமே!
வாழ்வுடன் மகிழ்வும்
இனிதாய் இணைய
பிறந்த நாள் உனதில்
வாழ்த்தினோம் இனிதே!!!
அன்புடன் வாழ்த்தும்,
அப்பா, அம்மா.
Subscribe to:
Posts (Atom)