உன் சொற்களில்
சுவையிருக்கும்
செயல்களில்
அழகிருக்கும் – உன்னிலே
இயற்கையின் மணமிருக்கும்
– அத்துடன்
அருகாமை ஒரு சுகம் கொடுக்கும்
உனை நேசித்தது(ப்பது)
தவறென உணர்ந்தாலும்,
விடுபட மனதுக்கு, ஏனோ
விருப்பமில்லை.
காலங்கள் கடந்தாலும்
உருவங்கள் சிதைந்தாலும்
என் நினைவுகளில்
மாற்றமது இருக்காது.
என்றேனும், எங்கேனும்
ஒருதலை காதலை கேட்டாலே
நினைத்துக் கொள்வாய்
நீயுமெனை.
No comments:
Post a Comment