Translate

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, December 19, 2008

ஓரு இளமையின் சோகம், பூத்த பூ காய்க்க வில்லை



கூட்டமாக இருந்த போது
குறிப்பாக கவர்ந்தானே.

துள்ளிக் குதிக்கிற வயதாலே
குதுகுலத்தை உணர்ந்தேனே.

ஒன்றாக சேர்ந்து தான்
சுற்றித் திரிந்தோமே.

கட்டவிழ்த்த கன்று போல
கடலையில் புரண்டோமே.

ஒன்றாக இருப்பது போல்
ஒரே பொருளை ருசித்தோமே.

எச்சிலெல்லாம் இனிப்பதாய்
மயக்கத்தில் சொன்னேனே.

தனியாக சென்ற போது
தவறிழைக்க செய்தானே.

கட்டு காவல் அத்தனையும்
கத்தரித்து சென்றேனே.

ஒன்று சேர நினைத்தபோது
ஒதுங்கித்தான் போனானே.

விட்டுவிட மனமின்றி
வீம்பாக இருந்தேனே.

நானவனை வளைத்ததாய்
சொல்லித்தான் திரிந்தானே.

அறைகூவல் விடுத்தபோது
அடங்கித்தான் போனானே.

சேர்த்து வைத்த பின்னாலும்
சேராமல் உள்ளோமே.

காலுக்கிட்ட விலங்காக
கோபமாக உள்ளானே.

இணைந்திருக்க நினைக்கின்றேன்
முடியாமல் போகிறதே.

சொல்லம்புகள் பட்டுத்தான்
கூசித்தான் போகிறதே.

மலிவான காதலாய்
மாறியது போனதே.

வலியச் சென்று, விஷப்பாம்பை
சுற்றித்தான் கொண்டேனே.

குடும்பத்துக்கு பாரமாய்
மாறித்தான் போனேனே.

கழுத்திலிட்ட தூக்காக
துடித்துத்தான் போகிறேனே.

பூவாய் பூத்திருந்தேனே,
உரியதான காலத்தில்.

காய்க்காமல் இருக்கின்றேனே,
காய்க்க வேண்டிய நேரத்தில்.








Thursday, December 11, 2008

ஏனோ ?

கூடிக் கழித்தேன்
கனவுகளில்.

விடிந்த பிறகும்
உன் நினைவு.

ஏனோ மறுக்கிறது
இதயம்.

நீ இல்லை என்பதை
அறிந்தும்.

Saturday, December 6, 2008

சாப விமோசனம்

மேலும் கீழும்
பட்டாடை மூடியிருக்க,
காலிலும் கையிலும்
வளையல்கள் பூட்டியிருக்க,

மூக்கிலும் காதிலும்
குத்திகள் பளபளக்க,
கழுத்திலிருந்த சரங்கள்
மார்புடன் உறவாட,

வண்ணப்பூச்சிகளாய்
இமைகளோ சிறகடிக்க,
கோளங்களாய்
விழிகள் ஒளி வீச,

நிறமிட்ட உதடுகளில்
நீர்ப்பூச்சு துளிர்த்திருக்க,
உடுக்கையாய்
இடை சிறுத்திருக்க,

நறுமணம் உமிழ்ந்தாள்
நாசிகள் உறுஞ்சிக் கொள்ள,
நின்ற நிலையாலே
சொரிய வைத்தாள் பெருமூச்சை.

காற்றின் விசையாலே
உடைகளோ பட்டமாக,
மனமோ பறந்தது
அப்பட்டமாக.

என் இதயத்தின்
துடிப்போசை,
அவளை எட்டியதோ
நாதமாக.

பரிதவித்த எனை நோக்கி
இளநகைக் காட்டினாள்,
விழிதனை
கணநேரம் ஓட விட்டு.





Saturday, November 24, 2007

காதல் படுத்தும்பாடு...

வைத்தனர் பந்தயம்
காதலை அறிய।

பனிமலை வெளியிலே,
கடும் குளிரிலே,
விடியும் பொழுதிலே,
யார் முதலிலே,
கூவி அழைப்பவரே
வென்றவராவார் என்றே।

கைகளைக் கோர்த்தனர்,
உறுதி எடுத்தனர்,
படுக்கச் சென்றனர்,
நடக்கப் போவதை அறியாமல்।

காதலி எழுந்தாள்
விடியலை உணர்ந்தள்
வெளியே விரைந்தாள்
காதலைக் கூவ।

அங்கவனைக் கண்டள்
ஆறாமையுடன் நின்றாள்
காதலில் தோற்றல் இல்லையென
ஆனந்தம் கொண்டாள்।

அவனை அணைத்து
கொண்டாட நினைத்தாள்
மென்நடைப் பயின்றாள்
தொட்டணைத்து உருண்டாள்
மகிழ்ச்சியைக் காட்டி।

அவனும் உருண்டான்
அவளுடன் இணைந்து
உயிரற்ற உடலாய்
பனியிலே உறைந்து.

Thursday, September 20, 2007

எல்லாமே காதல்.

அன்பும் ஒரு காதலே.
ஆசையும் ஒரு காதலே.
பாசமும் ஒரு காதலே.
பற்றும் ஒரு காதலே.
நட்பும் ஒரு காதலே.
நாடலும் ஒரு காதலே.
உள்ளத்தைத் தொடும் காதல்.
உயிரையும் கொடுக்கும் காதல்.
உயிரையும் வாங்கும் காதல்.
உற்சாகம் தரும் காதல்.
நீந்த வைக்கும் காதல்.
நீர்த்து போகும் காதல்.
மூழ்கடிக்கும் காதல்.
மூச்சை முட்டும் காதல்.
பொங்கி வழியும் காதல்.
பொல்லா அரக்கக் காதல்.
உறவாட முயலுமே காதல்.
உறவை முறிக்குமோ காதல்.
வாழச் செய்யுமோ காதல்.
வழுக்கிச் செல்லுமோ காதல்.
துள்ளச் செய்யுமே காதல்.
துவளவும் செய்யும் காதல்.
துடிக்க செய்யுமே காதல்.
துன்பத்தையும் தருமே காதல்.
ஆட்டிப் படைக்கும் காதல்.
ஆறா எண்ணக் காதல்.
ஆறுமோ மனக் காதல்.
மறையுமோ வெட்கக்காதல்.
மறைக்குமோ அச்சக்காதல்.
வாய் சொல்லா மனக்காதலை
சொல்லுமோ
கண்கள் காதல்.
அறிய முடியா காதலால்
தவித்தேன்  காதலால்.
அறிந்தாயா  காதலை
உரைப்பாயா  காதலை.

Sunday, June 3, 2007

தூள் தூள்

உன்னில் ஊடுருவ
கைக் கொண்டேன்
பல வழி
அத்தனையும்
தூள் தூள்.

கண்டுக் கொண்டேன்
ஒரே வழி
அன்பு எனும்
அம்பாய் பாய்ந்து
நங்கூரமிட்டு
நிற்பேன் நான்
உன் மனத்தில்.

போனேன்.......

உன்னில் வைத்தாய்
உறைந்து போனேன்.

தள்ளி வைத்தாய்
தவித்து போனேன்.

வெளியே வைத்தாய்
வெந்து போனேன்.

காற்றாய் வந்தாய்
கரைந்து போனேன்.

சூழ்நிலையால்.....!!!!!



ரகசிய சிரிப்பிலே
உன் கண்களோ
மினுமினுக்கும்
இமைகளோ
படப்படக்கும்
முகமோ
குபீரென சிவக்கும்
உடலோ
நிலையற்றுத் தவிக்கும்.

இந்நிலையில்
இதயமோ
துடித்துடிக்க
கைகளோ
பறப்பறக்க
நினைத்திடுவேன்
வாரி அணைக்க
கட்டுண்டுயிருப்பேன்
உனை கானும் நான்,
சூழ்நிலையால் !.