Translate

Thursday, August 22, 2019

என்ன மாயம் செய்தாயோ!!!!!

என்ன மாயம் செய்தாயோ!!!!!









#சாமியை வணங்கும் நேரத்திலே,
பார்வையைக் கவர்ந்தக் கள்வனே.
#பிரியமாகிப் போகுதடா -நினைவு
#கவிதைப் பாடச் சொல்லுடா.

#சாமியாய் உன்னை நான் ஏற்க,
#பிரியாமல் நீ என்னுடன் இணைந்து,
#கவிதைகளை பாடினால்
கால மெல்லாம் இனிக்குமடா.

#சாமி சாமி என்றென்றே
#பிரியமாய் உதடுகள் உச்சரிக்க,
#கவித்துவமாய் கனவுகள் தோன்றுதடா,
இறைத் துதிக்கும் போதிலும்.

#சாமியென்றே நானுருக,
சாந்தி அடைய செய்வாரோ?
#பிரியங்கள் பொங்கி வழிய,
#கவிதைகளைப் புனைவாயோ???








தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.






# இக்குறிட்டச் சொற்களை கீழிருந்து மேலாக ஒவ்வொரு பாராவிலும் இணைத்து  வாசித்துப்
பார்க்க.

No comments: