சுமக்கத்தான் விரும்புகிறேன் கருவிலே,
வளக்கவே விரும்புகிறேன் கவிதைகளாய்.
தாயெனப் பேரெடுக்க
தவமிருந்தேன் கருக் கொள்ள,
ஏனோ கருக் கொள்ளும் வேகத்தில்
கலைந்துத்தான் போகின்றீர்.
கதறியே துடிக்கின்றேன்
உமை கருக் கொள்ளமுடியாமல்.
அளவற்ற வாரிசுகளாய்
பிறந்து நீங்கள்,
அள்ளியே தருவீரோ
வளர்க்கும் வாய்ப்புதனை.
தாயுமானவன் இவனென
பேரெடுக்கச் செய்வீரோ.
-தவப்புதல்வன்
திறந்து பாருங்கள். உணர்வதை பதியுங்கள்.
http://aambalmalar.blogspot.com