Translate

Monday, May 13, 2013

அஞ்சலி செய்தி. - *** இரங்கற்பா ***

அஞ்சலி  செய்தி.  


 
நேற்று 12/5/2013 ஞாயிறு இரவு பாண்டிசேரியில் ஐயா அகஸ்ட் மார்சல் அவர்கள், அருகொடை ஆண்டவரின் பொற்பாதங்களில் சரணடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவர் மறைவால் ஈடில்லா துயரத்தில் ஆழ்ந்துள்ள, அன்னாரின் இல்லத்தரசி சந்தன மேரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனசாந்தியும், இயல்பான வாழ்வும், தொடர இறைவனை பிரார்த்தித்து எங்கள் ஆழ்ந்த வருத்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*** இரங்கற்பா ***

சந்தனமாய் உம் நினைவுகள் 
சந்தன மேரியம்மாள் நினைவலையில் 
நிலையாக நிறுத்தி விட்டு,
வாழ்வு நிலையில்லையென 
நிலையாக அடைந்தீரோ 
ஆண்டவரின் பாதங்களில்.
உம் நினைவும் நீங்காது 
ஆண்டவரின் அருள் உள்ளவரை.
அசீர்வதிப்பீர் உம் குடும்பத்தினை,
ஆலமாய் செழித்திடவே..



--
இப்படிக்கு
தவப்புதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்.
மற்றும் குடும்பத்தினர்.

Sunday, May 12, 2013

அன்னையர் தின வாழ்த்துக்கள்


இப்புவியிலுள்ள anaiththu தாய்மார்களுக்கும்

 "ஈடில்லா இனிய அன்னையர் தின  வாழ்த்துக்கள்"




Saturday, May 11, 2013

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில், 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை ரூ 500லிருந்து ரூ.1000மாகவும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.1500லிருந்து ரூ.3000மாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ 2000திலிருந்து ரூ 4000மாகவும், இளங்கலை பட்டபடிப்பு பயில்வோருக்கு 3000லிருந்து 6000மாகவும், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.3500லிருந்து ரூ.7000மாகவும் இந்த நடப்பாண்டிளிருந்து இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் 23,454 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

இதேபோல பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரின் கல்வியறிவை மென்படுத்தும் வகையில், வாசிப்பாளராக பணியாற்றுபவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.1,500ம், இளங்கலை பட்டபடிப்புக்கு ரூ.2,500ம், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்விக்கு ரூ.3000ம் என வாசிப்பாளர் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை நடப்பாண்டிலிருந்து இருமடங்காக உயர்த்தி வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

சிறப்பு ஸ்கூட்டர்கள்: இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 400ல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு முன்னுரிமையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணி புரியும் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிளிருந்து பயனாளிகளின் எண்ணிக்கை 1000மாக உயர்த்தபடுவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக , 32 நடமாடும் சிகிச்சை பிரிவு நடமாடும் வாகன மருத்துவமனைகள் [நடமாடும் ஹாஸ்பிட்டல்கள் ] துவங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

**இதுவரை கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரும், தாங்கள் பயிலும் கல்விக்கூடங்கள் மூலமாக விண்ணப்பித்து பயனடையக் கேட்டுக் கொள்கிறோம்.

**சிறப்பு ஸ்கூட்டர்களுக்காக, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்திய, மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதுடன் அம்மாணவ மாணவியருக்காக சில வேண்டுகோள்களை பணிவுடன் சமர்பிக்கிறோம். :

1) பட்டயப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கவும்

2) அஞ்சல்வழி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் கருத்திலே கொண்டு, இவர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பித்து ஊக்கப்படுத்த வேண்டுமாய் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Friday, May 10, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Dhavappudhalvan



அன்பு அண்ணன் திரு. தவப்புதல்வன் பத்ரிநாராயணன் அவர்களுக்கு எனத் நெஞ்சார்ந்த இனிய பி
றந்தநாள் நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றென்றும்..




சென்ற 7/5/2013 ந் தேதி எமது பிறந்தநாளுக்காக, நண்பர் வசந்தகுமார் அவர்கள்,  எமக்கு வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து.

http://www.facebook.com/photo.php?fbid=10200461931568584&set=t.100000889537867&type=1&theater

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - << Happy Birthday Dhavappudhalvan>>



<< Happy Birthday Dhavappudhalvan>>
=========================
அன்பு நிறை தவப்புதல்வன் பத்ரி நாராயணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... இறைவனருளால் என்றும் வளமாக நலமாக நீடூழி வாழ வேணுமாய் பிரா
ர்த்தித்து வாழ்த்துகிறேன்... வாழிய பல்லாண்டு... 




சென்ற 7/5/2013 ந் தேதி எமது பிறந்தநாளுக்காக, நண்பர் சாதீக் அலி அப்துல்லா அவர்கள்,  எமக்கு வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து.
http://www.facebook.com/photo.php?fbid=653144474700729&set=t.100000889537867&type=1&theater

வாழ்த்துக்கள் இலவசம் - இது எப்படியிருக்கு?



இன்று இனிய பிறந்த நன்னாளாம்.
இவரை வாழ்த்த வேண்டுமாம்  ஆஹா.. ஓஹோ.. என்று.

இலட்சியங்கள் முன்னிற்க, - அதற்கான 
இலட்சணங்கள் ஏதுமின்றி,

வருடங்களோ கழிகையிலே 
வழுக்கிக் கொண்டு செல்கையிலே,

காற்றிலே கரைகிறதே 
காலங்களாம் அது.

ஒன்றுமே இல்லாமலே,
ஓங்குபுகழ் பெருகவென்று,


நகராத நிலையிலே 
நலன்கள் பல நிலைக்கவென்று,

வருடங்கள் போன பின்னே,
வாழ்வாங்கு வாழ்கவென்று,

மார்கழிப் பனியைப் போல,
மடை திறந்த வெள்ளம் போல,

வரிசைக் கட்ட வேண்டுமாம் 
வாழ்த்துக்களை வைத்துக் கொண்டு.

இன்று உனக்கு பிறந்தநாளாம் தவப்புதல்வனே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


-- 
இப்படிக்கு
உன் அண்ணன்
A.M.பத்ரி நாராயணன்.


*நண்பர்களே! இன்று தவப்புதல்வனுக்கு பிறந்தநாளாம்.
  பாவம், இவரையும் வாழ்த்திவிட்டு போங்கள் பிறந்த நாளுக்கு.

# நண்பர்கள், உனக்கு எத்தனை வாழ்த்தட்டைப் போடுவார்களோ?
   நீயே, உனக்கொரு வாழ்த்து இட்டுக் கொள் என்றது மனம்.

#  மனம் சொன்னதை தட்டா மாண்புமிகு இவர்.

#  சுய பட்சாதாபம், சுயதம்பட்டம். ஹா.. ஹா... ஹா.......

*

சென்ற 7/5/2013 ந் தேதி எமது பிறந்தநாளுக்காக, எமக்கு யாமே வெளியிட்ட வாழ்த்து.