Translate

Monday, April 28, 2014

அவசரத்திற்கு உதவா தொலைப்பேசி எண்கள்



அரசாங்கத்தாலும், அரசு தொலைப்பேசி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், ஏர்செல், ஏர்டெல், வோடாபோன், எம்டிஸ் மற்றும் பல தனியார் தொலைபேசி நிறுவனங்களும்  மக்கள் அவசர பயன்பாட்டிற்காக பல  இலவச மற்றும்  சேவை தொலைப்பேசி எண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதில், பல சமயங்களில் மிக சிரமம் தான். ஏனென்றால் அந்தந்த நிறுவன தொலைப்பேசிகளில் தான் பயன்படுத்தமுடியும். வேறு நிறுவன தொலைப்பேசிகளிலிருந்து மற்ற நிறுவனங்களின் நமது தொலைபேசி  இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது பற்றியோ, குறை நிறைப்பற்றியோ, வேறு நிறுவனங்களுக்கு, அவர்களின் கட்டணங்கள் மற்றும் சேவை பற்றி அறிந்து கொள்ளவோ அல்லது அரசாங்கத்தால் மக்களின் அவசர பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள எண்களையோ பயன்படுத்த முடிவதில்லை.

உ -ம்:
1) அவசர எண்களான 100 - போலீஸ் , 101- தீயணைப்பு, 108 - ஆம்புலன்ஸ் போன்ற  பல அரசு சேவை எண்களை, அரசு நிறுவனமான  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொலைப்பேசிகளில் மட்டுமே தொடர்புக் கொள்ள முடியும். அதன் மற்றொரு இணைப்பான கை(அலை)ப்பேசிகளில் பயன்படுத்த முடியுமா என்பதை  யாமறியோம்.  ஆனால் மற்ற தொலைபேசி நிறுவனங்களில் பயன்படுத்த கண்டிப்பாக பயன்படுத்த முடியாத நிலையே.

2) ஆம்புலன்ஸ், பிராணி நல தொலைப்பேசி எண்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டுதா இயங்குகிறது. அதனால் உடனடி சேவையாற்றுவதில் சிறிது தாமதமேற்படுகிறது. மற்ற எண்களைப் பற்றி யாமறியோம். மேற்கண்ட எண்கள் எமது அனுபவத்தில் தெரிந்ததால் குறித்துள்ளோம்.

உ-ம்: எமது தந்தையார் மாரடைப்பினால் மாரனமடைந்து விட்டதை அறியாத நிலையில், தனியார் நிறுவன கைப்பேசி இணைப்பு இருப்பதால், அவசர நிலையில் அதிலிருந்து அரசு  ஆம்புலன்ஸுக்கு தொடர்புக் கொள்ள முடியவில்லை. அரசு நிறுவனமான  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொலைப்பேசி தரை வழி இணைப்பு இருந்ததால், நல்லவேளை என கருதி அதில் தொடர்புக் கொண்டபோது, ஆயிரத்தெட்டு கேள்விகள். வீட்டு விலாசத்துடன் முக்கியமான அடையாளங்களை தெரிவித்தும், அது எங்கிருக்கிறது என கேள்விகள்.
ஒரு கட்டத்தில் யாம் வெறுப்படைந்து, ஐயா முக்கியமான அடையாளங்களை சேலத்தில் தெரிவித்தும் தங்களால் அறிய முடியாவிட்டால், தூரப்பகுதிகளை அறிந்து, உங்களால் எப்படி உதவமுடியுமென கேட்டதற்கு, நாங்கள் சென்னையிலிருந்து பேசுகிறோம், சேலத்தில் தெரியாதே என்றார்கள். அவசர உதவி கேட்டால், அறியாத ஊரிலிருந்து உதவமுடியுமா?

ஒரு இடத்திலிருந்து அழைப்பு வந்தால், அடுத்த நொடியே எங்கிருந்து அழைப்பு வருகிறது என்று அறியக்கூடிய வகையில் எவ்வளவோ மின்னணு வசதிகள் வந்துவிட்ட பிறகும் இப்படியா?  அழைப்பு வந்தால் தானாக அந்த இடத்திற்கு அருகில் இருக்ககூடிய உதவி மையத்திற்கு அழைப்பு செல்லும் வகையில் அமைக்க முடியாதா? இதனால் எத்தனையோ விபத்துக்களையும் விபரிதங்களையும் தடுக்க முடியுமல்லவா?

எத்தனையோ புதுபுது சட்டங்களை இயற்றி நாட்டை நிர்வாகிக்கின்ற  அரசு, அரசாங்க நிறுவனம் மற்றும் அனைத்து தனியார் தொலைப்பேசிகளின் இலவச, சேவை மற்றும்    அரசாங்கத்தின் சேவை எண்களை , அனைத்து தொலைப்பேசி நிறுவனங்களும் ஏற்று செயல்படுத்த அவசர உத்திரவு இட்டால் மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இதை உணர்வார்களா? உணர்ந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?

Saturday, April 26, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Raghuram 2013

 
 ரகுராம் Raghuram  29/10/2013
 
நித்தமும் காட்சிகளோ   
நினைவுகளில் அரங்கேற.
சிந்தனையால் வடிவமைப்பாய்  
சிற்பியாய் நீயிருந்து.
வடிவுகளின் அழகோ 
வாழ்விலும் எதிரொளிக்க,
நலமுடன் வாழவே - இந் 
நன்னாளில் வாழ்த்தினோம்.
 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Raghuram & Surehka




Raghuram & Surehka


நலனும் மகிழ்வும் இணைந்திருக்க,
தொடரும் உறவுகள் இனித்திருக்க,
பெரியோர் ஆசிகள் வழி நடத்த,
இறைவனின் அருளோ உடனிருக்க,
வாழிய நீவீர் பல்லாண்டு
புவி இயம்பும் புகழோடு.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -




Balasubramanian Coimbatore
 


புகுந்து விட்டது
வருடம் புதிதாய்.
வகுக்கும் நினைவுகள்
கூடுதலாய் மேலும்.
உவப்பாய் பலவும்
தொடர்ந்து வரவே,
இனிதான நாளில்
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Friday, April 25, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -





Vaira Mani
State deputy general seceretary
Tamil Nadu Udavikkaram Association for the welfare of the differently abled,  

ஒன்றுடன் ஒன்றிணைந்து,
சுவைப்பட அவைக் கலந்து,
மனத்திலே மகிழ்வூட்ட,
திடமான உடலுடன்
நலம்பட வாழ்ந்திட,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - A.r. Ramesh Babu



A.r. Ramesh Babu


சொல்லிலே சுவையும்,
உடலிலே நலமும்,
மனத்திலே மகிழ்வும்,
நீடித்த வாழ்வும்,
இறைவனின் அருளால்
என்றுமே நிலைக்க
தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

Wednesday, April 23, 2014

ஆசிரியர்

பாலாறு,
தேனாறு,
தெவிட்டாத
தமிழாறு.

வாத்தியாரு,
வந்தாரு.
சொல்லிக்
கொடுத்தாரு.

ஆனாரு,
பானாரு,
மனசிலே
வெச்சாரு.

பார்த்தாரு,
எடுத்தாரு,
நினைவிலே
நின்னாரு.

சொல்லாலே,
செயலாலே,
காட்டத்தான்
சொன்னாரு.

சோதனை
பல செய்து
பலமது

தந்தாரு.

தேர்ந்தாரை
உளமாற
தட்டிக்
கொடுத்தாரு.

என்றென்றும்
புகழடைய
ஆசிகள் பல
தந்தாரு.

வலை நண்பருக்கு !

அலை பாயும் மனத்திலுள்ள,
வார்த்தைகளை இணைத்து வைத்து,
வலை வழியே அனுப்பி வைத்தேன்
கவிதையேனும் வடிவினிலே.

கண் வழியே பெற்று நீங்கள்
மனவறையில் வைப்பீரோ!

நண்பரிடையே அளவிளாவி
விரிவடைய வைப்பீரோ!

காற்றலையில் பறக்க விட்டு
மறைந்து போக செய்வீரோ!

வலையெனும் வில்லாலே,
ஒளியெனும் அம்பாலே,
கவிதையெனும் சொல்லாக,
மென்பஞ்சு இதமாக,
வலியொன்று இல்லாமல்,
உம்மனத்தை துளைத்திருப்பேன்.

தேன் சிந்தும் மலராக,
புன்னகை முகத்தில் வழிந்தோட.

வின்னிலிருக்கும் மீன்களாக,
கண்களோ மினுமினுக்க.

படித்துப் பார்த்த உங்களுக்கு
நன்றிகள் பல நவின்று
முடிக்கின்றேன் இக்கவிதைதனையே!!!!

வேண்டும்! வேண்டும்.!!



நெருப்பாய் கக்க வேண்டும்.
தீமைகளை அழிக்க வேண்டும்.
புத்துணர்ச்சிக் கொடுக்க வேண்டும்.
செழிப்பாய் செழிக்க வேண்டும்.
அதைக் கண்டு மகிழ வேண்டும்.
ஆனந்தம் அடைய வேண்டும்.
வெற்றியென குதிக்க வேண்டும்.
வீண் பேச்சு குறைய வேண்டும்.
அருமையாக படைக்க வேண்டும்.
ஆற்றலதை ஊட்ட வேண்டும்.
தமிழ் கண்டு மகிழ வேண்டும்.
தமிழிலே புரள வேண்டும்.
தங்கமாய் சொலிக்க வேண்டும்.
இயலிசையாய் ஒலிக்க வேண்டும்.
இலக்கணமாய் இருக்க வேண்டும்.
எனெறெனெறும் காக்க வேண்டும்.
தமிழென்றும் நிலைக்க வேண்டும்.
எங்குமது பொங்க வேண்டும்.
ஏற்றமாய் இருக்க வேண்டும்.
தயக்கமின்றி பயில வேண்டும்.
தாரகையாய் மின்ன வேண்டும்.
வாசித்து மகிழ வேண்டும்.
பிழையின்றி இருக்க வேண்டும்.
புதுமைதனைப் பூண வேண்டும்.
புதுக்கலைகள் தோன்ற வேண்டும்.
விந்தை பலப் புரிய வேண்டும்.
விண்ணிலே உலவ வேண்டும்.
கிரகங்களை அடைய வேண்டும்.
மண்ணிலே பயிரிட்டு
விண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
மனித மனம் மாற வேண்டும்.
புனிதமாய் இருக்க வேண்டும்.
இரண்டென்றே நினைக்க வேண்டும்.
ஆண் பெண்ணென உணர வேண்டும்.

Tuesday, April 22, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Radha Krishnan



Radha Krishnan  55 years


வாழ்வின் கணக்குகளோ
நித்தமும் புதுபுதிதாய்.
இலகுவாயும் முனைப்புடனும்
அவிழ்த்த முடுச்சுகள்
ஏராளம் ஏராளம்.
இனி தொடரட்டும்
இலகுவாய் அத்தனையும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Monday, April 21, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ponnuthurai Kitnar



Ponnuthurai Kitnar ·63 Years

சிந்தும் சொற்களெல்லாம்
செய்திகளாய் சிதற,
அள்ளும் மனங்களை
அளவிடயியலா நிலையில்.
வற்றா நதியாய் - உம்
கைவண்ணம் என்றுமே மிளிர,
 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Arul Mozhi



Arul Mozhi


அள்ள அள்ள குறையாத
அளவிடயியலாத
அருந்தமிழில்
அழகுற கவி படைக்கும்
அருள்மொழி உமக்கு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Rama Subramaniaraja



Rama Subramaniaraja 51Years

பயிலும்  வித்தைகள்
பறந்தோட செய்யும்
பற்றுடை வாழ்வு
பழமாய் இனிக்க,
இந்நாளில் வாழ்த்து.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Thursday, April 17, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Anu Ashok




Anu Ashok  [16/09/2013]


அனுவனுவாய் நித்தமும் 
அனுபவித்தே வாழ்ந்திருக்க, 
ஆற்றலால் செயல்படுத்தி, 
ஆகாயத்தில் பரவவிட்டு, 
அனைவரையும் கவர்ந்திழுக்க, 
ஆரதித்தாயோ தீந்தமிழில் கவிப்புனைந்து. 




முன்கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.


////எழுதுகோல் இல்லாத பொழுதுகளில் 
எழுத ஆயிரம் வார்த்தைகள் ! 
 நீ இல்லாத பொழுதுகளில் 
இயம்ப ஆயிரம் ஆசைகள் .\\\


எழுதுகோல் இல்லாமலே 
 பதிக்கின்ற பெண் கவியே. 
சொற்களெல்லாம் சுவையூட்டும் 
தித்திக்கும் தேனாக.
வாழ்த்துக்கள் இனிதாக வருமே உமக்காக.

Tuesday, April 15, 2014

திருமண வாழ்த்து மடல் - Shobana With Murali

சென்ற 13.04.2013 ஞாயிற்று கிழமை அன்று, நடைப்பெற்ற எமது மகள் ஷோபனா திருமணத்தில் வாசித்தளித்த திருமண வாழ்த்து மடல்.