Translate

Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Friday, November 21, 2008

ஏனிந்த துன்பம்!

ஒவ்வொரு முறையும் சகோதரர்களும்,அவர்தம் குடும்பமும்,
சகோதரியின் மகனும் வெளி நாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு
வந்து விட்டு, விடுமுறை முடிந்து திரும்பும்போது வீட்டில்
உள்ளவர்கள் வெவ்வேறு காரணங்களால் கலங்குவது கண்டும்,
சென்ற 16\11\2008 அன்று
எமது சகோதரி மகன் சுபகர் தம்பதியினர்
மலேசியாவுக்கு திரும்பி புறப்பட்டபோது நடைப்பெற்ற நிகழ்வினை
தொடர்ந்து பிறந்தது
இந்த கிறுக்கல்.


ஏனோ துன்பம்
ஒவ்வொரு முறையும்
எங்களை விட்டு
பயணம் கொள்ள,
புறப்படும் நேரம்
துடிக்கும் நெஞ்சம்
கண்களில் நிறையும்.
தொண்டைக் குழியில்
அடைத்தது போன்று (கொண்டு)
மூச்சை முட்டும்.
புறப்பட்ட பின்போ
கானும் நாளை
கணக்கிட துவங்கும்.
மனத்திலும் கணக்கு,
நாட்காட்டி பார்த்து
கண்களில் கணக்கு.
வாயும் முனுமுனுக்க
விரலிலும் கணக்கு.
தவறின்றி இருக்க
தினமும் கணக்கு.
கானும் வரையும்
தொடர்ந்த கணக்கு,
கண்ட பின்னும்
தொடரும் கணக்கு.
எத்தனை நாள்
எம்முடன் இருப்பாய்?
எந்த நாளில்
எமை விட்டு பிரிவாய்?
என்றன போடும்
கணக்குகள் தொடரும்.
மீண்டும்
புறப்படும் நேரம்
துடிக்கும் நெஞ்சம்......