Translate

Showing posts with label தலைப்ப்ப்ப்பூ....??????????. Show all posts
Showing posts with label தலைப்ப்ப்ப்பூ....??????????. Show all posts

Wednesday, September 20, 2017

தலைப்ப்ப்ப்பூ....??????????


சொன்னா கேக்கல
சோறிட்டும் நடக்கல
சொந்தமுன்னு சொல்லிக்கிட்டு 
சோதனைகள் தாங்கல.
ஆத்தாடினு நினைப்பதா?
அம்மான்னு அழுவறதா?
அத்தனையும் பாத்துக்கிட்டு
சும்மாதான் கிடப்பதா?
இப்படித்தான் நடப்பாரோ?
இதுக்கு மேல செய்வாரோ?
இது என்ன கொடுமையடா?
இது எப்ப தீருமடா?
எட்டித்தான் உதைத்தாலேயே
எட்டியவர் போவாரோ?
கிட்ட வந்து முட்டியெனை
கீழேத்தான் தள்ளுவாரோ?
என்ன இது அசிங்கமடா.
எப்படி சொல்ல தெரியலடா.
ஏன் இப்படின்னு புரியலடா.
ஏங்கி நான் தவிக்கின்றேன்.
முடிச்சுகளை யார் அவுப்பா?
முட்டாளா யோசிக்கிறேன்.
முழுவதுமா பாத்திட்டு
முட்டிக்கணுமா சுவத்துல தான்?
சொன்னா உமக்கு புரியாது.
சொல்லவும் எனக்கு தெரியாது.
சொந்தமும் இல்ல, விட்டுடுங்க. -தல
சொரிஞ்சது போதும் நிறுத்திடுங்க.
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.