Translate

Tuesday, September 24, 2013

கறைகளாய் நிதமும்..



காமத்தின் நினைவுகளோ
கண்களை மறைக்க,
கட்டியே இழுக்கிறது
கற்புகளை அழிக்க.

காட்டாற்று வெள்ளமாய்
கரை புரண்டோட,
தடைகளை அகற்ற
தயக்கமின்றி முனைந்து,
குத்தியே கொல்கிறார்
கொலைகளையும் துணிந்து.

அல்லும் பகலும்
அழகு பதுமையாய்
அரிதாரம் புனைந்த
அழகுமையிலாள் செயல்கள் யாவும்
அணைகிறதே இந்நிகழ்வுகளால்.


பாழும் மனமோ
பரவசத்தை தேட,
பலியாகிறாள் விளையாட்டு பொருளாய்
பாவிகளிடம் அவளும்.

 ஆணவத்தின் குரலோ
ஆட்டு விக்க,
ஆண்டு விட துடிக்கிறான்
அதிகாரம் செய்து.

அதட்டியே அவளும்
ஆக்ரோசமாய் பாய்ந்தும்
ஆனதே இந்நிலை
அடையாள கறைகளாய்.




தாலாட்டும் நிலையில்
தந்தையானவனும் -
தகாத செயலால்
தறிக்கெட்டு போனவனாய்
தன் வாரிசையே பலிட்டான்
தாரமாய் நினைத்து.

பார்த்த காட்சிகளோ
உணர்வுகளை தூண்ட,
தமையனாய் இருந்தும்
தங்கையென பாராமல்
தயக்கமின்றி ருசித்தான்
தன் தாகம் தீர்ந்திடவே.

அடக்கிவிட துணிந்தவனுக்கு
அடங்கிட மறுத்தாலோ,
அகற்றியே விடுகிறான்
அவள் உயிரை, நொடி பொழுதில்.

காசும் காமமும்
கட்டவிழ்த்து கொள்ள,
காலமும் படுகிறது
கறைகளாய்  நிதமும்..

நெருப்பிற்கே ஆடையாய்


தீயின் தாகமோ
கொழுந்து விட்டு எரிய,
அலறினார் அம்மணி
அதிர்சியில் உறைந்து.

எரிவாயு தாக்கமோ
பாரென சொல்ல,
போர்களமானது
சமையலறை நொடியில்.

எண்ணத் தீர்வுகளோ
சிக்கலாய் இருக்க,
கருத்த மேகமாய்
புகையோ சூழ,

நினைவுகளிலிருந்து
பிரிந்து வந்தது,
ஒளியின் கீற்றாய்
உதயமானது
மனத்திலொன்று

நீர்த்துளிகள் சொட்ட,
தலையை மூழ்கி
ஈரமுடன் வந்தது
நெருப்பை தழுவ.

சூவாலையின் வேகத்தை
சுத்தமாய் நிறுத்த,
நெருப்பிற்கே ஆடையாய்
விரைந்து வந்தது சணல் சாக்கு.



Monday, September 23, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tap Varadakutti

 


 Tap Varadakutti

கண் மூடி திறப்பதற்குள்
காலங்கள் விரைகிறது.
வாழ்க்கையின் பக்கங்களிலோ
புதுப்புது அனுபவங்கள்.
அத்தனையும் அடுக்கி வைக்க
ஆவலாயிருந்தாலும்
இனிதான நினைவுகளே
முன்னின்று உம்முடன் உறவாட,
நலனும் மகிழ்வும்
என்றுமே நிலைத்திருக்க,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரான தலைவரே.


Sunday, September 22, 2013

அம்மா...மூஞ்சிய கொஞ்சம் காட்டு.

அம்மா...மூஞ்சிய கொஞ்சம் காட்டு.
நாங்களும் பாத்துக்கொவோம்மல்ல.
 
State Bank of India வங்கியில்
வேலை செய்பவர்கள்
எப்படி சீட்டு விளையாடிக்கொண்ட
ே வேலை செய்கிறார்கள் பாருங்கள் !
வங்கியில் பணம் போட்டவர்கள் வரிசையில்
பிச்சைக்காரர்கள் போல் காத்திருக்கின்ற
னர் ! எந்த ஊர் எனத்தெரியவில்லை !
நன்றி ! பகிர்ந்த நண்பருக்கு !
 
 

குடிநீர் வாழ்வின் உயிர் துளி - Drinking Water

 
Drinking Water
At the Correct Time
Maximizes
Its Effectiveness On The
Human Body

*2 Glasses Of Water After
Waking Up
- Helps Activate Internal
Organs

*1 Glass of Water 30 Minutes
Before a Meal
- Helps Digestion

*1 Glass of Water Before
taking a bath/shower
- Helps Lower Blood Pressure

*1 Glass of water before
Going to Bed
- Avoids Stroke or Heart
Attack

Happy Drinking (H20)!!

காம்- ஆட்சி = காமராஜ் ஆட்சி.

 
 
(ஆனந்த விகடன்- ஆண்டு 1963)

தமிழகம்



தொழில் வாய்ப்புகள்,
நீராதாரங்களைப் பெருக்குதல்,
சிறு தொழில் வளர்ச்சி,
வேளாண் உற்பத்தி
மின்சார உற்பத்தி அதிகரித்தல்,
வீண் ஆடம்பர செலவீனங்களைக் குறைத்தல்,
சட்டம் ஒழுங்கை சீர்படுத்துதல் போன்ற துறைகளில்
பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது.

சுயநலன், ஊழல்,
அரசியல் காழ்ப் புணர்ச்சி,
தனிநபர் மீதான தாக்குதல்
இவற்றைப் பின்தள்ளி
மாநில நலனை
ஆளுங் கட்சியும்
எதிர்க்கட்சிகளும்
மனதில் கொண்டு செயல்பட்டால்
தமிழகம் அனைத்து துறைகளிலும்
முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.
 
 
 

எட்டு பேருக்கு மறுவாழ்வு...




திருவள்ளூர் எல்லாபுரம், மஞ்சங்காரணியை சேர்ந்த 37 வயது குணசேகரன், சோழவரம் இருளப்பட்டில் மீன் வலை தயாரிக்கும் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தவர், சமிபத்தில் பதவி உயர்வு மூலம் புதுசேரியில் திருவண்டார்கோவில் கிளைக்கு பதவி உயர்வில் மாற்றலாகி சென்றார்.

கடந்த 5/9/13 அன்று பணியில் இருந்தபோது எதிர்பாரா விதமாக, இஞ்சினில் சிக்கி பலத்தக் காயமடைந்தவரை, ஆபத்தான நிலையில் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5, 6 நாட்களுக்கு பிறகு குணசேகரன் மூளைசாவு நிலையை அடைந்தார்.

இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவர் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததை ஒட்டி, அவரின் கண்கள், சிறுநீரகம், இதயம், உள்ளிட்ட எட்டு உறுப்புகள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த எட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.









குணசேகரனுக்கு, வித்யா என்ற மனைவியும், சினேகா, ரஞ்சித் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சிக்கலான நேரத்திலும், தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த வித்யாவையும், அவரது குடும்பத்தினரையும் டாக்டர்கள் பாராட்டினார்கள்.

குணசேகரனின் ஆத்மா சாந்தி அடையவும், குணசேகரனின் பிரிவால் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர் மனைவி வித்யாவுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கல்களையும் வருத்தத்தையும் பகிர்ந்துக் கொள்வதுடன், எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்க ஒப்புதலளித்த நமது பாராட்டுகளையும், நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

என்னிடம் இருக்கும் நண்பர்களுக்காவது உன்னை அறிமுகப் படுத்துகிறேன்


 தமிழ் பாடகி ....



சொய் சொய்"என்று நம் காதுகளில் ஒலிக்கும் காந்தக்குரல் இவருடையதுதான்.இவரின் புகைபடத்தை காண எண்ணி கூகுளில் சல்லடை போட்டு சலித்தாலும் ஒன்று கூட மாட்டது.அதற்க்கு அவர் பெயர் கூட காரணமாய் இருக்கலாம்.அவரின் பெயர் மகிழினி மணிமாறன்.
"சம்மக்சல்லோ" பாடிய வெளிநாட்டுக்காரனின் பெயரையும், புகைப்படத்தையும் வலைத்தளத்தில் ஏற்றி கொண்டாடிய நமக்கு இந்த தமிழச்சியின் புகைப்படத்தையும் பதிவேற்ற மனம் இல்லையோ?..

தமிழனே தமிழனை மதிக்காவிட்டால் யார் தான் மதிப்பாங்க...? தயவுசெய்து இவரின் புகைப்படத்தை உங்களுக்கு அறிமுகமான வலைதளங்களில் பதிவேற்றி ஒரு தமிழச்சியை பெருமைபடுத்துங்கள்.

குறிப்பு:
இந்த புகைப்படம் ஆனந்தவிகடன் வலைத்தளத்தில் இருந்த ஒரு வீடியோவில் இருந்து எடுக்க பட்டது,,(இருந்தது ஒரு வீடியோதான் நண்பர்களே..)

என்ன கொடுமையடா சாமி..!


நண்பர்கள் குழு

Thursday, September 19, 2013

வருத்தத்திற்குறிய செய்தி...




தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ஏழ்மையான  மாற்றுத்திறனாளியும், எமது நண்பருமான திரு.கிருஷ்ணன் அவர்களின் மனைவி மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் , தொடர் மருத்துவத்திற்கு பண உதவி கிடைக்காமல், இன்று (20/09/2013)  காலை சிறிது நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை மிகவும் ஆழ்ந்த   வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது மனைவி ஆத்மா சாந்தி அடையவும், சொல்லொண்ணா பெரும் துயரத்தில்  மூழ்கியிருக்கும் நண்பர் திரு .கிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


# முகநூளில் வேண்டுதல்கள் வெளியிட்டும்,   பல நண்பர்களிடம் தொடர்புக் கொண்டும் , அவர் மனைவிக்கு தேவையான மருத்துவ உதவியை பெற்று தரமுடியாமல் போனது, எமது நெஞ்சை உலுக்கி எடுக்கிறது.




வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்

" வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் " திருமதி.சுந்தராம்பாள் அவர்களின் குரலில், இந்த அருமையான பாடலுடன்
இனிய காலை வணக்கமும்.
உங்கள் தவப்புதல்வன்.

https://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s

சூடான சுவையான செய்தி - இன்றொரு தகவல்



"கூகுள் கிளாஸ்"- தொழில்நுட்ப உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் இன்றைய கண்ணாடி. இது மூக்கு கண்ணாடியல்ல. ஆனால் மூக்கு கண்ணாடி போன்று அணிந்துக் கொள்ளக்கூடிய கம்பியூட்டர் (கணினி) இது. கணினி உலகில் அடுத்த படி இதுவாகும்.

கண்ணாடியில் இது எப்படி? பட்டியலாய் காண்போமா?

!) இதில் வை - ஃபை, புளூடூத், டச் ஸ்கிரீன், இன்டர்நெட் வசதிகள் இருக்கு.

2) வீடியோ எடுக்கலாம், போட்டோ எடுக்கலாம். எடுத்ததை   அக்கண்ணடியில் உள்ள மெம்மரி கார்டில் சேமித்து வைக்கும். அதை சமுக வலைத்தளங்கள், இ-மெயிலில் ஷேர் செய்யலாம்.

3) உங்களுக்கு வரும் இ-மெயில்களை காட்டும். அதற்கு வாய்மொழி மூலம் பதில் அளித்தால், எழுத்துக்களாக மாற்றி விடும்.

4) ஏதாவது சந்தேகம் தோன்றி, கேள்வி கேட்டால் பதில் தந்துவிடும். உதாரணமாக, உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வழித்தடங்கள், இப்படி நாம் கணினியில் பார்ப்பது போல இணையதளத்தில் தானாக தேடி, கண்ணாடியில் காட்டிவிடும்.

5) பயணிக்கும் போதே, செல்லும் பகுதிக்கு வழிதடம் கேட்டால், மேப் ஸ்கிரீனில் காட்டும்.

6) உலகில் நாம் எங்கு சென்றாலும், நாம் காண்பதை, உடனுக்குடன் அப்படியே  நேரடி காட்சியாக வேண்டியவர்களுக்கு காட்டலாம். ஒளிபரப்பலாம்.

7) அடுத்ததாக இதிலுள்ள தொழில் நுட்பம் , நமது அன்றாட பழக்க வழக்கங்களை கவனிக்கிறது. உதாரணமாக, அன்றாடம் அலுவலகத்துக்கு செல்லும் நேரம், வழித்தடம், காலநிலை போன்றவற்றை தெரிவிக்கிறது. (சின்ன வீடு, பெரிய வீடு, அப்படி இப்படியென்று அனைத்தையும் சொல்லும் போலிருக்கிறது. ஹா... ஹா... ஹா...)

8) எல்லாவற்றிக்கும் மேலாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொது, அந்த நாட்டு மொழியை நமது மொழிக்கு மொழி பெயர்த்து தருகிறது.

** இதை பயன்படுத்தி சென்னை டாக்டர் ராஜ்குமார் செய்த ஆபரேசன் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பட்டு, பலருக்கும் ஆச்சிரியம் ஏற்படுத்தியுள்ளது.

9) அடட... அத்தனையு சொல்லிட்டு, விலை   சொல்லவில்லையே. ரொம்ப அதிகமில்லைங்க, 95 ஆயிரம் ரூபாய் தாங்க.

# நீங்க வாங்கினா சொல்லுங்க, சமயத்திலே நானும் மாட்டி பாக்குறேங்க.

# நான் சின்னவனா இருக்கும்போது சொல்லுவாங்க, எக்ஸரே கண்ணாடி இருக்குதுன்னு. கண்ணாடி மாட்டிகிட்டா, உள்ள இருக்கிறத, அப்படியே பாக்கலாமுன்னு, அப்ப ஒரு அரசியல் தலைவர் அந்த எக்ஸரே கண்ணாடிய போட்டுக்கிட்டு இருக்கிறதா பரப்பரப்பா பேசுவாங்க.
இப்போ வந்தே வந்துடுச்சி கம்பியூட்டர் மூக்கு கண்ணாடி.

16+1 கூடிய விரைவில்....

எப்பொழுதும்  சுமையுடனே ஓயாமல் ஓடும் லாரி.  தளராமல்  சுமையேற்றும் லோடுமேன். கடவுள் கொடுக்கிறாரென, கவலையின்றி செயல்படுகிறார்கள்.  ஆலம் விழுதுகளாய் படர்கிறது. பிரிட்டன் லாங்காஷயர் அருகே மோர்கேம்ப் பகுதியை சேர்ந்த நோயல் 41. அவரது மனைவி சூ ரேட்ஃபோர்ட் 38. சொந்தமாக பேக்கரி வைத்துள்ளார்.




திருமணமான 23 மூன்று ஆண்டுகளில் 16 குழந்தைகலுக்கு பெற்றோரான இவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், குடும்பத்தின் 17வது புது நபராக, ஒரு வாரிசு பிறக்கப்போகிறது.  16வது குழந்தைக்கும் பிறக்க இருக்கின்ற 17ம் வாரிசுக்கும் 11 மாத இடைவெளி தாங்க. இந்த தம்பதியர் சராசரியாக 17 மாத இடைவெளியில் குழந்தைகளைப் பெற்றேடுத்துள்ளனர். பிரிட்டனில் இவர்கள் குடும்பம் தான் மகா பெரிய குடும்பமாக கருத்தப்படுகிறது.

இவர்கள் குடும்பத்தைப்பற்றி, 2011லேயே '15 குழந்தைகளும் அதற்கு மேலும் ' என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டது. தனது குடும்பத்திற்காக 9 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வெளியே சென்று வர, மினி பஸ் ஒன்றையும் வைத்துள்ளனர்.


### 16 பெற்றும் அடங்காமல், பிரிட்டனை கலக்கும் இத்தம்பதிகள்,  "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க " என்ற தமிழ்  பழமொழியை கேட்டு, தவறாக புரிந்து கொண்டு விட்டார்களோ? .




Wednesday, September 18, 2013

ஹா... ஹா... ஹா...

"கனவுகள் தரும் அதிர்ச்சி வைத்தியம்"

இந்த தலைப்பை வாசித்ததும் வலைதள வாசக நண்பர்கள், இது ஏதோ மருத்துவ குறிப்பு போல் இருக்கிறது என நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. " கிளிக் செய்து" வாசித்து பாருங்கள், உங்கள் கனவுகளைப் பற்றியும் குறிப்பிடுவீர்கள்.

இனிய நாட்களாக கழிய வாழ்த்தும்
உங்கள் தவப்புதல்வன்.







இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Sivagami Eswaran




உடையானின் உடையவளாய்
உமையம்மை ஆனவளே.
அம்மையப்பனின் அம்பாள்-
அம்மையாய் இருப்பவளே.
உலகுடையானின் வடிவுடையம்மையாய்
உள்ளுக்குள் உறைபவளே.
வழித்துணையானின் வழி பற்றி
வாழ்வை இனிதாய் வாழ்பவளே.
சொக்கனவன் அருளுடனே
வாழியே பல்லாண்டு
வாழ்கவே நலமுடனேன வாழ்த்தினோம் 
உம் இனிய இப்பிறந்த நன்னாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.



# ஆண்பால் பெயர்கள்= ஈஸ்வரனையும்,
   பெண்பால் பெயர்கள்= சிவகாமியையும் குறிக்கும் வேறு பெயர்கள்.

Tuesday, September 17, 2013

அன்றிவன் வருத்தபடா வாலிபன்



வருத்தபடா வாலிபனாய் அவனிருந்தான்
வந்தாளே அவளொரு தேவதையாய்.
அணைத்தாளே வளைக்கரத்தால்
துவண்டாளே பூங்கொடியாய்.
குரலிலோ குழலிசைய,
பொழிந்தாளே தேன்மழையாய்.

இணைந்தனரே இசைவாக,
இனித்ததே நாட்களெல்லாம்.
இற்றுப்போன கயிறாக - அவள்,
அவனை நினைத்தாளோ?
இன்று கூண்டில் நிறுத்தி விட்டாள்,
கற்பழித்த காமகனாய்.

ஐயஹோ.. என் செய்வான்?
வந்தவளும் அவளே.
வந்தணைத்தவளும் அவளே.
வந்த வேகத்தில் மறைந்து விட,
மயக்கத்தில் இருந்தவனை,
விலங்கிட செய்து விட்டாள்.

உணர்வுகளின் வேகத்தால்
கூடி மகிழ்ந்த நாட்களது.
ஒன்றோடு ஒன்றிணைந்த
ஓருடல் இதுவென்றாள் .
இடைவெளிகள் ஏதுமின்றி
இடை சேர்த்து திரிந்தனரே.




தலை சாய்த்து அவள் குழவி,
திண்தோள் உமதென்றாள்.
பஞ்சனை மடியென்று
தாலாட்டி படுக்க வைத்தாள்.

நிலையந்த நேரத்திலும்
இதழோடு இதழிணைத்து
தேனென ஒழுக விட்டு,
அமுதமென உறுஞ்சிக் கொண்டாள்.

அன்றவனது இதயமோ
சில்லென்ற பனிமலையாய்.
இன்றது கொதிக்குதடா,
எரிமலையாய் புகைந்துக் கொண்டு.

 பொசுக்கிவிட பார்க்கின்றான்,
அவளுடனான நினைவுகளை.
அழுத்தமாய் பதிந்துள்ளதே 
கல்படிமங்களாய் அவன் மனத்தில்.

அன்றோ தள்ளாடினான்
அவள் கொஞ்சிய மயக்கத்தில்.
இன்றும் தள்ளாடுகிறான்
அவள் கொடுத்த அதிர்ச்சியில்.




 #வருத்தபடா வாலிபர்களே!
    வருந்தும் நிலையடையாதீர்.

கனவுகள் தரும் அதிர்ச்சி வைத்தியம்


                          

எமக்கு சிறு வயதிலிருந்தே, பல சமயங்களில் கனவுகள் தோன்றிக் கொண்டிருக்கிறது. (எமக்கு மட்டுமே என கூறவில்லை. அனைவருக்கும் வருவதுதான்).  சில கனவுகள் நினைவுகளில் முழுமையாக பதிந்துவிடும். அப்படிப்பட்ட சில வித்தியாசமாக நினைக்க தோன்றும்  கனவுகளை பதிவும் இட்டிருக்கிறோம்.

பெரும்பாலான  இக்கனவுகள், எம்மை உறக்க நிலையிலிருந்து முழுமையாக விழிப்படைய செய்யவும் , மாறுப்பட்ட அல்லது ஒரே நிலையில் நீண்ட நேரமாக துயில் கொண்டிருக்கும் எமை மீள செய்யவும் இப்படிப்பட்ட கனவுகள் வருகிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டோம்.

இருப்பினும் பல கனவுகளுக்கு காரணமே அறியயியலாமல் இருக்கும். சுமார் இந்த பத்து நாட்களில் வந்த சில கனவுகள்  உங்களுடன்.

1) ஒரு பத்து நாட்களுக்கு முன் உறக்கதில் இருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டு, இதோ வருகிறேன் என கூறியபடியே சென்று கதவைத் திறந்தால், அங்கு யாருமில்லை. ஓ.. விடிந்திருந்தது பொழுது.

2) என்னங்க ... எம் மாதரசியின் குரல், என்னம்மா... என நவின்றபடியே யான் எழ,
 என்னங்க ... என்றபடி எம் மனையாள் அங்கு வர, எதற்கு எமை எழுப்பினீர் என்றோம். அவர் இல்லையே என இயம்ப,  அப்போது தான் தெரிந்தது, அது கனவு என்று.

 3) ஹி.. ஹி.. ஹி... சொல்ல வெட்கமா இருக்கு, இருந்தாலும் சொல்லி விடுகிறேன்.  அமர்ந்தபடியே யாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம். அப்போது கன்னத்தில் ஒரு பளார், விட்டது யாருமில்லைங்க. எம் மனையாட்டிதாங்க அது.  ஓ...வென கன்னங்களை தேய்த்தபடியே விழித்தோம். தெரிந்தது அதுவும் கனவுயென்று.

                                




4) நேற்று முன்தினம் யாம் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கல் எம் தோள் மூட்டையைத் தாக்க, பயங்கர வலியுடன் விலுக்கென்று விழித்தெழுந்தோம்.  வலியையும் உணர்ந்தோம். பின் அறிந்தோம், ஒரே பக்கமாக நீண்ட நேரம் படுத்து உறங்கி இருக்கிறோம், அதனால் தான் இந்த  தோள்பட்டை  வலியென்று.

இவற்றை நினைவுபடுத்தி எழுதிக்கொண்டிருந்த நேரத்தில், இதற்கு காரணமான இன்றைக்கு வந்த கனவு மறந்து விட்டதுங்க. ஹா.. ஹா... ஹா....



  # கனவுகள் நிசமாகுமென்றால், ஐயகோ...எம் இல்லத்தரசியிடம் கன்னத்தில் அடிவாங்குவேனா?

Sunday, September 15, 2013

இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

ஓணத்திருநாளோ
ஒப்பற்ற பெருநாளே.
மாபலி வருகையாலே
மனமகிழும் நன்னாளே.
இன்பத்துளிகளோ
இனி தொடர்ந்திருக்க,
நலம் நாடும் நட்புகளாய், 
நாள்தோறும் மகிழ்ந்திருக்க.
இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உலகிலுள்ள அனைத்து மலையாளிகளுக்கும்,
மலையாள நண்பர்களுக்கும்
இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ஹேமலதா சந்திர சேகரம்





தாய் மண்ணின் ஊட்டத்தினால்
கவி பூக்கும் தமிழ் மலரே,
உம் வணக்கங்கள்
உமை வாழ்த்த,
ஆனந்த அலைகளோ
அன்புடனே உன்னை வருட,
*'தங்க கொடி'யாய் பிறப்பெடுத்து,
*நிலவின் சேகரமாய் நீயிருக்க.
நீண்டதாக இருக்கட்டும்
மகிழ்வுடனே உன் வாழ்க்கை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.




* தங்க கொடி= ஹேமலதா

* நிலவின் சேகரம் = சந்திர சேகரம்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - T.v. Krishnan

T.v. Krishnan


மங்கள நிகழ்வுகளோ
மகிழும் நினைவுகளுடன்
மங்காத புகழ் பெற்று,
மாளா நலமுடன் வாழ,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.




இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Raghavan Srinivasan


Raghavan Srinivasan
உள்ளத்தில் பொங்குமது.
உள்ளதை சொல்லுமது.
உணர்வுகளோ புரண்டோட,
உருவங்கள் ஆகுமது.
உண்மைக்கும் பொய்மைக்கும்
உறுதியான இழையமைத்து,
உலகோர் போற்றும் விதம்
உண்டாகட்டும் கவிதைகளயது.

நலன்கள் யாவும் நீர் பெற்று,
நல்லோர் உமை வாழ்த்த .

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இவரையும் வாழ்த்துவோம்... Mr.Rajagopal



கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகிலுள்ள கொடுங்குளத்தை சேர்ந்த மினி லாரி ஓட்டுனர் ராஜகோபால் கூறுவதை சிறிது வாசியுங்கள்.

குடும்ப வறுமையால் 10ம் வகுப்பு வரை படித்தேன். லாரி கிளீனராக கடுமையாக உழைத்து, மினி லாரி வாங்கினேன். ஒரு முறை சவாரிக்கு செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீஸ் மற்றும்  பொது மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

அடிப்பட்டவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர் பிழைக்க வைத்தேன். 'நீ நல்ல இருக்கணும்... ' என அவர் வாழ்த்தியதை புண்ணியமாக கருதினேன்.

அந்த வாழ்த்து தான், என் வாழ்க்கையையே மாற்றியது. ஏனென்றால், நானும் ஒரு வேளை விபத்தில் சிக்கி, இப்படி மற்றவர்கள் வேடிக்கைப்பார்த்தால், என் மனநிலை எப்படியிருக்குமென சிந்தித்துப் பார்த்தேன்.

அன்று முதல் யார் உயிருக்கு போராடினாலும், இறந்து கிடந்தாலும் அவர்களுக்கு உதவினேன். இதுவர 500க்கு மேற்பட்ட அவற்றை உடல்களை நல்லடக்கம் செய்ததுடன், 15 உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளேன். 20க்கு மேற்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்துள்ளேன்.

மார்த்தாண்டத்திலிருந்து லோடு ஏற்ற, மினி லாரி ஓட்டி செல்லும் போது, என் லாரியை ஒரு அரசு பஸ் வேகமாக கடந்து சென்றது.. அந்த பஸ்ஸின் பின் இரட்டை சக்கரங்களில், ஒன்று இல்லாமளிருப்பதைக் கண்டு, லாரியை வேகமாக ஓட்டி சென்று, பஸ்ஸை நிறுத்தி சொன்ன பிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது. சக்கரங்களின் நெட்டுகள் சரியாக மாட்டாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் 35 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியதால், 2011ம் ஆண்டு வீரதீர செயலுக்கான "அண்ணா பதக்கம்" வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. 

இவரைப்போன்றவர்களை வாழ்த்த வேண்டியதும்,  ஊக்குவிக்க வேண்டியதும் நமது கடமை. இவரை வாழ்த்தவும், இவர் சேவையை பெறவும், அவருக்குரிய தொடர்பு எண்: 98431 07819




நண்பரே, இனிதாகட்டும் இன்றைய நாள் உமக்கும் உமது குடும்பத்தினருக்கும்.

Saturday, September 14, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - J Vel Raj


J Vel Raj

மகிழ்வுகள் என்றும் விற்பனைக்கல்ல.
கொள்முதல்கள் எல்லாம் மகிழ்வுகளாய் இருக்க,
கொடுப்பதையெல்லாம் அன்புடன் கொடுத்து
பெறுவது எல்லாம் ஆசிகளாய் இருந்து
நலமுடன் நாட்கள் இனிதாய் கழிய,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


Photo: மகிழ்வுகள் என்றும் விற்பனைக்கல்ல.
கொள்முதல்கள் எல்லாம் மகிழ்வுகளாய் இருக்க,
கொடுப்பதையெல்லாம் அன்புடன் கொடுத்து 
பெறுவது எல்லாம் ஆசிகளாய் இருந்து 
நலமுடன் நாட்கள் இனிதாய் கழிய,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்



 



SyLvia VeLanganni Sebastian


இணைந்த உள்ளங்கள் இறுகியே இருக்க,
மலரும் நினைவுகளோ புதுபுதிதாய்  பூக்க.
புன்னகைக்கும் இதழ்களோ தேன்துளிகள் சிந்த,
உறவும் நட்பும் உலகளாவ விரிய - முதலாம்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

Photo: இணைந்த உள்ளங்கள் இறுகியே இருக்க,
மலரும் நினைவுகளோ புதுபுதிதாய்  பூக்க. 
புன்னகைக்கும் இதழ்களோ தேன்துளிகள் சிந்த,
உறவும் நட்பும் உலகளாவ விரிய - முதலாம் 
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sai Ramasamy


Sai Ramasamy

கோடுகளெல்லாம் கட்டங்களாய்
கோபுரமாய் ஆகுதம்மா.
கலையழகு காட்சிகளை
கண் விரிந்து பார்க்குதம்மா.
தென்றலின் சுகம் போல 
மனம் சொக்கி போகுதம்மா.
உம் பணிகள் அத்தனையும்
மெய் சிலிர்க்கும் வகையமைய
இனிதான இந்நாளில்
இயம்புகிறோம் வாழ்த்துகளை
நலமுடனும் புகழுடனும்
நீர் வாழ்ந்திருக்க .

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. 

Photo: கோடுகளெல்லாம் கட்டங்களாய் 
கோபுரமாய் ஆகுதம்மா.
கலையழகு காட்சிகளை 
கண் விரிந்து பார்க்குதம்மா.
தென்றலின் சுகம் போல  
மனம் சொக்கி போகுதம்மா.
உம் பணிகள் அத்தனையும் 
மெய் சிலிர்க்கும் வகையமைய 
இனிதான இந்நாளில் 
இயம்புகிறோம் வாழ்த்துகளை 
நலமுடனும் புகழுடனும்
நீர் வாழ்ந்திருக்க .

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

குழந்தைகளின் ஆபாசப்படம், 50 ஆண்டு சிறை.




அமெரிக்காவில் கன்சாஸ் சிடியில் உள்ள கத்தோலிக்க டயோசீஸ் கட்டுப்பாட்டிலுள்ள தேவாலயத்தில் பாதரியாராக பணியாற்றியவர் ஷாஷ்ன் ராடிகன் வயது 47. பழுதான தன்  'லேப்டாப்' பை சரி செய்வதற்காக கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவரிடம் கொடுத்தார்.

அதை சரி செய்தபோது, அதில், குழந்தைகளின்  ஆபாசப்படங்கள் ஏராளமாக இருப்பதை பார்த்த கம்ப்யூட்டர் நிபுணர், கத்தோலிக்க பிஷப் ராபட் ஃபின்னிடம் ஒப்படைத்துள்ளார். பிஷப்போ,  போலீசிடம் ஒப்படைக்காமல், பாதரியாரை, குழந்தைகளிடமிருந்து விலகியிருக்கும்படி உத்தரவு இட்டுயிருக்கிறார்.

ஆனால் அவரோ அதை பொருட்படுத்தாமல் மீறியதால், 2011ம் ஆண்டு  போலீசில் ஒப்படைக்க, இந்த புகார் வழக்கில், தன குற்றங்களை ஒப்புக்கொண்ட  ராடிகன், குறைந்தபட்ச தண்டனையாக 15 ஆண்டுகள் வழங்க கோரியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, 50  ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறார்.

தனி மனித சுதந்திரம் நிறைந்துள்ள அமெரிக்க நாட்டிலேயே, மடிக்கணினியில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை சேமித்து வைத்ததற்காகவே 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கி இருக்கிறார்கள். குறைந்தபட்ச தண்டனையே 15 ஆண்டுகள், இதை கவனியுங்கள். ஆனால் இந்திய நாட்டிலோ மழலைக் குழந்தை முதல் சாகப்போகும் கிழவி வரை கற்பழிக்கலாம், கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம்.  யாரையும் கேட்க நாதி கிடையாது. அப்படியே கேட்டாலும் பரிந்து பேச சிலர். சீரழிந்துக் கொண்டிருக்கிறது இந்திய திருநாடு கட்டுப்பாடுயின்றி.

Friday, September 13, 2013

கசப்பான உண்மைகள்!!



1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!


ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz


புரிய வேண்டியவருக்கு புரியுமா?
புரிந்தாலும் சரி செய்ய மனம் வருமா?


Thursday, September 12, 2013

சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்

 
 
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி. . . .

முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..

எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..

Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..

ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'
என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..

நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...

ஆம்...!

அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..

நன்றாக யோசித்துப் பாருங்கள்...

ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!

தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்
இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..

ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..

(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..

அண்ணா..

இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...

அப்போதுதான் அவருக்கு உறைத்தது..

# Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..

அதன்பிறகு,
உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும்மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..

இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..

இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,
இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..

இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..

இதற்கு, நமது # பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..

முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..

ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..

அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால்,

# உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..

இதுதான் மிகச்சிறந்தவழி..

இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..

இது பெண்களுக்கு மட்டுமல்ல..

எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,
இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை கைவலிக்க எழுதியுள்ளேன்..

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

நன்றி -
(சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)

உயிரோடு ஆசிரிய சேவை, உயிரற்ற நிலையில்......



உயிர் காத்த மருத்துவமனைக்கு உடல் தானம் செய்த தம்பதி

கடந்த 20 ஆண்டுக்கு முன், தற்கொலைக்கு முயன்றபோது, உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்கு, தங்களது உடல்களை தானமாக வழங்க உறுதிமொழி கடிதம் கொடுத்துள்ளனர், சிவகங்கை தம்பதி.

சிவகங்கை சி.பி., காலனியைச் சேர்ந்த, கார் டிரைவர், சந்திரமவுலீஸ்வரன், 47. மனைவி மீனாம்பாள், 42. மேலப்பூங்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இருவரும்,நேற்று, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்தக்குமாரை சந்தித்து, தங்களது உடல்களை, மருத்துவக்கல்லூரிக்கு தானம் அளிப்பதற்கான உறுதி மொழிக் கடிதத்தை வழங்கினர்.

தம்பதி கூறியதாவது:

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள், 1992 ல், திருமணம் செய்தோம். இரு தரப்பிலும் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல், தற்கொலைக்கு முயன்றோம். எங்களது உயிரை, அரசு மருத்துவமனை டாக்டர்கள்தான் காப்பாற்றினர்.

இதற்கு நன்றிக் கடனாகவும், மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையிலும், இருவரின் உடல்களை தானம் செய்ய முயன்றபோது, கடந்த 2 ஆண்டுக்கு முன், பிள்ளைகள் தடுத்தனர். தற்போது, பி.டெக்., படிக்கும் எனது மகன், ""எனது உடலை தானம் செய்யப் போகிறேன், நீங்களும் தானம் செய்யுங்கள்,'' என்றான். இதன்படி, உறுதி மொழிக் கடிதத்தை வழங்கினோம். இவ்வாறு கூறினார்.

கல்லலைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி, ஓய்வு பெற்ற அரசு டாக்டர் காந்தி, 73; நேற்று, உடலை தானம் செய்வதற்கான கடிதம் கொடுத்தார். அவர் கூறுகையில், ""உயிரோடு, மருத்துவ சேவை புரிந்தேன். உயிரற்ற நிலையில், மாணவர்களுக்கு எனது உடல் சேவை புரிய வேண்டும் என்பதற்காக உடல் தானம் செய்கிறேன்,'' என்றார்.

குட்டி "ரத்தக் காட்டேறி "



கொசுக்களின் மூலம் பரப்பப்படும் மலேரியா நோயால் 2010ம் ஆண்டு கணக்குப்படி, உலகில் ஆண்டு தோறும் சுமார்  8 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இதில் 90% சதவீதம் பேர் ஆப்ரிக்காவில் பலியாகின்றனர்.   5  உட்பட்ட குசந்தைகளையும், கர்பனிப் பெண்களையும் எளிதாக இது தாக்குகிறது. மலேரியா நோய் முற்றிலும் தடுக்கவும் குணப்படுத்தவும் கூடியது.

'அனாபெல்ஸ்' என்ற பெண் கொசுக்களில் தான்  உலக ஒழிப்பு தினம் மலேரியாவைப் பரப்பும் ஒட்டுண்ணி இருப்பதை, 1897ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர் கண்டு பிடித்தார். மலேரியாவைப்  பற்றிய ஆராய்ச்சியில் 1882 முதல் 1899 வரை 18 ஆண்டுகள் ஈடுப்பட்டார்.
இவர் 1902ம் ஆண்டுமருத்துவத்திற்கான  நோபல் பரிசு பெற்றார்.  பிரிட்டன் சார்பில் முதல் நோபல் பரிசுப் பெற்ற பெருமைக்கும் உரியவர். இவர் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 20ம் தேதி, மலேரியாவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை தடுப்பதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ' உலக கொசு ஒழிப்பு தினம்' கொண்டாடப்படுகிறது. 

ரொனால்டு ரோஸ் 1857ல் உத்தரகண்ட் அல்மேரா மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு ஆங்கிலேய ரானுவ அதிகாரி. லண்டனில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்தியாவிலேயே ஆராய்ச்சிகள் செய்தார்.


# ஐயோ... அதையேன் கேட்கிறீர்கள்? ஆகஸ்ட் 20ம் தேதியே போடவேண்டிய பதிவு இது. முதலில் வீட்டில் கொசுவை ஒழித்து விட்டு, மகிழ்வாய் பதிவிட பார்த்தோம். ஒழிக்கவும், சமாளிக்கவும்  முடியாமல், முடிவெடுத்தேன் பதிவை வெளியிட்டு விடுவதென? நீங்களாவது முயற்சி செய்து பாருங்கள். வேறென்ன, கொசுவை ஒழிப்பதுதாங்க.

Wednesday, September 11, 2013

மஹாகவி பாரதிக்கு நினைவஞ்சலி. (11/9/13 )


மஹாகவி பாரதி

காணா உன் தீரத்தை
கனவுகளில் கண்டோமே.
எழுத்திலே உணர்ந்தோமே - உம்
எண்ணிலடங்கா ஏக்கங்களை.

தமிழ் தந்த உம் சொற்கள்
தடம் புரண்டு செல்லாமல்,
தணியாத தாகமுடன்
தட்டியெழுப்ப நீ நினைத்தாயே.
தரணியெங்கும் விரிந்ததே
தாய் பராசக்தி அருளாலே.

தவழும் குழந்தைக்கு பாட்டிசைத்தாய்
தாமரையானவளுக்கும் ஊட்டி விட்டாய்.
தளராமல் நெஞ்சுயர எடுத்துரைத்தாய்.
தலையாய் தமிழென்றும் நிமிர்ந்திருக,
தவமாய் வாழ்வை நீ கழித்து
தழைக்கவே இயம்பி, இறையடைந்தாய்.

தட்டிக் கேட்க துணிவின்றி
தலைக்குனிந்து செல்கின்றோம் - நீ
தந்த எழுச்சிகளும் குமைந்திடுமே
தமிழினம் தாழும் நிலைக்கண்டு.

தமக்கையாய், தங்கையாய், அவள் நிலையோ
தங்கமாய் ஒளிர்ந்து உயர்ந்திடவே,
தவழவிட்டாய் கவிதைகளில்
தன்னிகரில்லா சிறப்படைய.

தறிக்கெட்டு போகுமென உணர்ந்தாயோ
தரம் தாழுமென நினைத்தாயோ,
தமிழன்னை தந்த மாகவியே...
தலை தாழ்த்தினோம் மீண்டும் உமக்கு அஞ்சலியாய்.







ரூ 700 வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை







டெல்லியில் சந்த் பாக் புலியா என்னுமிடத்தில் 2009ம் வருடம் சாகர் மற்றும் அவர் கூட்டாளி அலாவுதீன் ஆகிய இருவரும், ஒரு நபரை துப்பாக்கிக் காட்டி மிரட்டி, கத்தியால் கிழித்து விட்டு, அவரிடமிருந்த 700 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். நீதி மன்றத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர் நீதி மன்றமும் தண்டனையை உறுதி படுத்தியுள்ளது. - செய்தி

# 700 ரூபாயை வழிப்பறி செய்தால் 7 ஆண்டு தண்டனை. பல லட்சம் கோடி ஊழல் செய்தால்?

# பணம் பறிகொடுத்தவர் ஒரு வேளை அவர் வி.ஐ.பி. யா இருப்பாரோ? அல்லது அவரின் உறவு, கைத்தடி, பணியாளாய் இருப்பாரோ?

# கற்பழித்தால் மூன்றாண்டு மட்டுமா?

என்ன கொடுமையடா சட்டத்தின் நிலை.

Tuesday, September 10, 2013

கொலை பாதகர்கள் - செயற்கை பால்



தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் பால் பயன்பாடு அதிகம். எருமைப்பால் தான் அவர்களின் விருப்பம்.

அதற்கேற்றாற்போல் கால்நடைப் பராமரிப்பு செலவுகள் கூடிக் கொண்டே செல்வதால், தேவைக்கேற்ப உற்பத்தியில்லை. எருமைகளும் அதிகளவு பால் சுரப்பதுமில்லை. அதனால் பாலில் கலப்படமும் அதிகம். நாம் அறிந்ததெல்லாம் பாலில் கலப்படம் என்றால் பாலில் தண்ணீர் கலப்பது மட்டும் தான்.

ஆனால் அதைவிட கொடுமை, உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அதை ஒட்டிய மாநில எல்லைகளிலும் கலப்படத்தின் புதிய பரிமாணத்தின் வளர்ச்சியாக, பாலே சிறிதும் இல்லாமல், சிந்தடிக் பால் என்னும் செயற்கைப்பாலை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்.

இந்த பால், தண்ணீர், ரீஃபைண்ட் ஆயில் (சுத்தகரிக்கப்பட்ட எண்ணெய் ), உப்பு, சர்க்கரை, யூரியா, டிட்டர்ஜேண்ட் பவுடர் ( சோப்புத்தூள் ), அத்துடன் கொழுப்பு இருப்பதைப்போல் காட்ட,பாமாலின் ஹோமொஜினைஸ் தொழில்நுட்ப முறையில் சேர்க்கப்படுவதால் இயற்கைப்பாளுக்கும், செயற்கைப்பாலுக்கும் வித்தியாசமே தெரிவதில்லையாம்.

# அறிந்ததும் நெஞ்சம் பதறுகிறது. செயற்கைப்பால் என்பதையே அறியாமல் குடித்து உயிர் விடும் சின்னஞ்சிறு நினைத்தால்....

# இத்தகைய கலப்பட கொடுமைகாரர்களுக்கு கடுமையான தண்டனை என்று வழங்கி கலப்படங்கள் தடுக்கப்படுமோ? ஐயகோ......

# தொழில் முனைவோரே, இப்படியும் வழியிருக்கிறதா என செயற்கைப்பால் உற்பத்தியில் ஈடுபடும் படுபாதக எண்ணத்திலும் செயலிலும் ஈடுபட்டு விடாதீர்கள்.

# இதை வாசிக்கும் வாசிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இதை செய்யுங்கள்.

# ஏறக்குறைய 10,000 லிட்டர் சிந்தடிக் பால் என்னும் செயற்கைப்பாலை கீழே கொட்டும் கட்சி. பால் கறவை காட்சிகளும்

ஹையா... நல்ல வருமானம்

 சென்னை சென்ட்ரல், எக்மோரிலிருந்து இயக்கப்படும் ரயில்களில், சென்னையில் உள்ள 2 பணிமனைகளில்   1.25 கோடி ரூபாய் செலவில் கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான், எலிகளை ஒழிக்க 3 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.- செய்தி

# ஹையா... நல்ல வருமானம்.

நினைத்தால் வாழலாம்... உலக தற்கொலை தடுப்பு தினம்.



ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய், பகிர்தலும், பாராட்டுக்களும், நன்றிகளும், நினைவுகளும், அறிவுரைகளும். அப்பப்பா.... நீண்டுக் கொண்டே போகிறது.

என்ன அச்சாரம் நீளமா இருக்கேன்னு பார்க்கிறிங்களா? ஒன்னுமில்லைங்க, இன்னிக்கு 'உலக தற்கொலை தடுப்பு தின' மாம். அதற்கான முன்னுரை தாங்க அது.

எத்தனையோ பிரச்சனைகள் தினமும் தாங்க. அதை எதிர்கொள்ளும் தைரியம் தேவை. அது இல்லாமல் போவதால் தற்கொலைகள். அவர்களை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டத்திற்கும், துன்பத்திற்கும், இழப்பிற்கும் ஆட்படுகிறார்கள், தள்ளப்படுகிறார்கள் என அவர்கள் நினைத்துப் பார்க்காமல், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாக தற்கொலையென இன்னுமும் பலர் நினைக்கின்றனர்.

சில காரணங்கள் சொல்லலாமா?
தொழிலில் நட்டம், வறுமை, கடன் தொல்லை இவைகளால் ஆண்களும், காதல் தோல்வி, வேலை பிரச்சனைகளால் இளைஞர்களும், கல்வியில் சாதிக்க முடியாத மாணவர்களும், ( இப்போது சில மாணவிகளும் ), வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட மேலும் சில கொடுமைகளால் பெண்களும் தற்கொலைகள் செய்துக் கொள்கின்றனர்.

அடேங்கப்பா.... ஒரு நாளைக்கு உலகம் பூராவும் 3000 பேர்,, வருசத்திற்கு 10 இலட்சம் பேர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். 15 - 44 வயதுக்கு உட்பட்டோர்தான் அதிகபட்சமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். நோய்களால் ஏற்படும் இறப்புகளில் தற்கொலை 25% சதவீதமாக இருக்கிறது.

தற்கொலை அறவே கூடாது என்பதற்காகவும், பிரச்சனைகளை சந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டால் தற்கொலையை தடுத்து விடலாம் என்ற விழிப்புனர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இன்று செப்டம்பர் 10ம் தேதியை 'உலக தற்கொலை தடுப்பு தினமாக' அறிவித்து செயல்படுத்தப் படுகிறது.

நண்பர்களே! எந்த ஒரு கடுமையான சூழ்நிலையிலும் தற்கொலை செய்துக் கொள்ளும் என்னத்திற்கு உட்படாதீர்கள். பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றியடைந்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.

பாடி ஸ்ட்ராங், பேஸ் மட்டம் வீக். ஜாக்கிரதை. எச்சரிக்கை..!





பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர்
செய்யுங்கள்...!
10 வயது மாணவன் ஒருவன் 15
நாட்களுக்கு முன்னர் அவன்
பள்ளி அருகில் விற்கப்பட்ட
அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அ
அடுத்த நாளில்
இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம
போனது.
அவனது பெற்றோர்
அவனை மருத்துவமனைக்கு அழைத்து ச
பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த
பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்ச
இருப்பது இரத்தப் பரிசோதனையில்
தெரிய வந்தது.
அவர்கள் குடும்பத்தில் இருக்கும்
அனைவரையும் இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால்
யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த
மாணவினடம் என்றில்
இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்
டாக்டர்.
15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில்
விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த
நாளில்
இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த
மாணவன் டாக்டரிடம் சொன்னான்.
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ
வியாபாரியை அழைத்து வரச்
சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கு
நறுக்கும் வியாபாரியின் கையில்
வெட்டு காயம் இருப்பதை டாக்டர்
பார்த்தார்.அவர் பழம் நறுக்கும்
போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல்
கலந்திருக்கிறது.
பழ வியாபரிக்கு இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்
டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ
வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய
வந்தது.இத்தனை நாட்களாக பழ
வியாபாரி தனக்கு எயிட்ஸ்
இருப்பதே தெரியாது என்றார்.
இனி மேல் ரோடுகளில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி சாப்பிடும்
அனைவரும் கவணமாக இருங்கள்.இந்த
தகவலை அனைவருக்கும் தெரிய
படுத்துங்கள் நண் பர்களே...எச்சரிக்கை

Monday, September 9, 2013

ஒரே நாளில் இடிந்த சேஃப்டிக் டேங் !

      

தமிழ்நாடு சேலம் மல்லூர் அருகே காந்தி நகர் என்ற இடத்தில் பொதுகழிப்பிடத்திற்கு அருகில் கழிப்பிடக் கழிவுத் தொட்டி ( சேஃப்டிக் டேங்)  கட்டிய ஒரே நாளில் இடிந்து விழுந்தது.

# நல்ல வேளை கட்டி முடித்து கழிவு நிரம்பியபின் இடிந்து விழுந்திருந்தாலோ, கழிப்பிடக் கழிவுத் தொட்டி சுத்தம் செய்யும் போது இடிந்திருந்தாலோ சுகாதார கேட்டுடன் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும்.

# இதற்கு காரணமான ஆட்களுக்கு தண்டனையாக, உபயோகத்தில் உள்ள பழைய கழிப்பிடக் கழிவுத் தொட்டியில்  ( சேஃப்டிக் டேங்கில் ) தங்க வைக்க வேண்டும்.



  • Sankar Mani Iyer அவுங்க பாவம் நல்ல தரமான டேன்க் தான் கட்டினாங்க. ஒரு சின்ன நில அதிர்வு. இடிந்து இருக்கும் போல.
  • Dhavappudhalvan Badrinarayanan A M ஆமாம், ஆற்றுமணலுக்கு பதில் கல் குவாரியில் இருக்கும் வேஸ்ட் பவுடர், ஒரு கல் செங்கலில் அரை கல் சுவர், சிமெண்ட் இருக்கிறது என்ற அடையாளத்திற்கு கொஞ்சம் கலவை தயாரித்துக் கட்டினால்? இடிந்து விழுந்ததுமே, அந்த இடத்திலிருந்த மீதியிருந்த கல் குவாரி வேஸ்ட் பவுடர் மாயம். கல் குவாரி வேஸ்ட் பவுடரும் ஒரு சின்ன நில அதிர்வில் பூமிக்கு கீழே போய் விட்டது போல. @ Sankar Mani Iyer
  • Sadeek Ali Abdullah அலட்சியத்தினால் ஏற்படும் உயிர்சேதம் ரொம்ப அவலமானது...