Translate

Tuesday, September 10, 2013

நினைத்தால் வாழலாம்... உலக தற்கொலை தடுப்பு தினம்.



ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய், பகிர்தலும், பாராட்டுக்களும், நன்றிகளும், நினைவுகளும், அறிவுரைகளும். அப்பப்பா.... நீண்டுக் கொண்டே போகிறது.

என்ன அச்சாரம் நீளமா இருக்கேன்னு பார்க்கிறிங்களா? ஒன்னுமில்லைங்க, இன்னிக்கு 'உலக தற்கொலை தடுப்பு தின' மாம். அதற்கான முன்னுரை தாங்க அது.

எத்தனையோ பிரச்சனைகள் தினமும் தாங்க. அதை எதிர்கொள்ளும் தைரியம் தேவை. அது இல்லாமல் போவதால் தற்கொலைகள். அவர்களை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டத்திற்கும், துன்பத்திற்கும், இழப்பிற்கும் ஆட்படுகிறார்கள், தள்ளப்படுகிறார்கள் என அவர்கள் நினைத்துப் பார்க்காமல், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாக தற்கொலையென இன்னுமும் பலர் நினைக்கின்றனர்.

சில காரணங்கள் சொல்லலாமா?
தொழிலில் நட்டம், வறுமை, கடன் தொல்லை இவைகளால் ஆண்களும், காதல் தோல்வி, வேலை பிரச்சனைகளால் இளைஞர்களும், கல்வியில் சாதிக்க முடியாத மாணவர்களும், ( இப்போது சில மாணவிகளும் ), வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட மேலும் சில கொடுமைகளால் பெண்களும் தற்கொலைகள் செய்துக் கொள்கின்றனர்.

அடேங்கப்பா.... ஒரு நாளைக்கு உலகம் பூராவும் 3000 பேர்,, வருசத்திற்கு 10 இலட்சம் பேர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். 15 - 44 வயதுக்கு உட்பட்டோர்தான் அதிகபட்சமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். நோய்களால் ஏற்படும் இறப்புகளில் தற்கொலை 25% சதவீதமாக இருக்கிறது.

தற்கொலை அறவே கூடாது என்பதற்காகவும், பிரச்சனைகளை சந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டால் தற்கொலையை தடுத்து விடலாம் என்ற விழிப்புனர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இன்று செப்டம்பர் 10ம் தேதியை 'உலக தற்கொலை தடுப்பு தினமாக' அறிவித்து செயல்படுத்தப் படுகிறது.

நண்பர்களே! எந்த ஒரு கடுமையான சூழ்நிலையிலும் தற்கொலை செய்துக் கொள்ளும் என்னத்திற்கு உட்படாதீர்கள். பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றியடைந்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.

No comments: