செய்யும் செயலின்
விரைவைக் கருதி
முடிவதை எடுத்து
கருத்தேனக் கொண்டார்.
கொள்ளும் எண்ணம்
சிதறா வண்ணம்
செயலைச் செய்ய
புத்துருக் கொடுத்தார்.
முதலென வரவே
நலமதை நினைத்து
வலமதைக் கொண்டார்,
நினைத்ததை முடித்தார்.
வாழ்வெனக் கொண்டால்
போட்டியது உண்டு.
வெற்றியதில் அடைய
விவேகமுடன் உழைப்பீர்.
நாடும் வீடும்
நலமது பெறவே
வழிதனை அறிய
பணிவுடன் பணிந்து
கணபதியைத் துதிப்பீர்.