Translate

Showing posts with label இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Sunday, October 15, 2017

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


இரண்டாய் இருந்ததை 
ஒன்றாய் ஆக்கிட, 
மங்கள நாண் கொண்டு 
மனங்களை இணைத்த 
நினைவிலே ஆடும் 
மணநாள் இன்றிது.

கலந்த மனங்கள் 
காதலுடன் நாளும் 
இனிமையாய் என்றும் 
இளமையாய் தொடர,
ஊன்றிய விழுதுகள் 
பசுமையாய்  விளங்க,
பல்லாண்டு பல்லாண்டு 
செழிப்பாய் திகழ,
அன்புடன் வாழ்த்தினோம் 
ஆண்டவனை தொழுது யாம்.

வாழ்த்தும் உள்ளம்,
தவப்புதல்வன்
A.M.பத்ரிநாராயணன்

Saturday, May 14, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

காதலால் இதயங்கள்
காலமெல்லாம் திளைத்திருக்க,
கடவுளின் கருணையால்
கட்டுண்டு மூழ்கிருக்க,
வாழ்க்கைப்படகு செல்லட்டும்
வழியெங்கும் மணம் பரப்பி.
தாமதமான திருமணநாள்
நல்வாழ்த்துக்கள் 

From: AMB & Family











Sunday, February 28, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.


காதலால் இனிதாக,
கல்யாணம் புதிதாக,
ஆனதான நினைவோடு,
குதூகல உணர்வோடு,
ஆண்டுகள் பல கடக்க,
ஆண்டவன் அருள் புரிய,
அமர்களமாய் வாழ வாழ்த்தினோம்
இனிய இத்திருமண நன்நாளில்.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். 

Monday, February 1, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

2014 
 
அன்பின் குரலோ (ல்)
வானத்திற்கும் பரவி,
ஆணவத்தின் செயலோ (ல்)
புவியினு (னி)ல் மக்கி,

பகிர்ந்தலிலுள்ள
மகிழ்ச்சி என்றும்,
 ஈடிணையில்லா
வாழ்க்கைக்கு சாட்சி.

அறிதலும் புரிதலும்
ஆனந்தத்தை நல்கும்.
அறிவுடை செயலால்
அகிலமே போற்றும்.

தூண்டுதலும் எண்ணெய்யும் 
இல்லையென போனால்
குடும்பத்து விளக்கும்
ஒளியின்றி போகும்.

அவசர கதியில்
இயங்கும் உலகம் – உம்
வாழ்வில் என்றும்
அவசரமின்றி,
ஆண்டவர் அருளால்
ஆனந்தமாய் நாட்கள்
இன்றுபோல் என்றும்
பாசமுடன் கழிய
 2014 க்குள் பார்க்க வேண்டும்.
 
அன்பின் குரலோ (ல்)
வானத்திற்கும் பரவி,
ஆணவத்தின் செயலோ (ல்)
புவியினு (னி)ல் மக்கி,

பகிர்ந்தலிலுள்ள
மகிழ்ச்சி என்றும்,
 ஈடிணையில்லா
வாழ்க்கைக்கு சாட்சி.

அறிதலும் புரிதலும்
ஆனந்தத்தை நல்கும்.
அறிவுடை செயலால்
அகிலமே போற்றும்.

தூண்டுதலும் எண்ணெய்யும் 
இல்லையென போனால்
குடும்பத்து விளக்கும்
ஒளியின்றி போகும்.

அவசர கதியில்
இயங்கும் உலகம் – உம்
வாழ்வில் என்றும்
அவசரமின்றி,
ஆண்டவர் அருளால்
ஆனந்தமாய் நாட்கள்
இன்றுபோல் என்றும்
பாசமுடன் கழிய

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.  

Friday, January 29, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

சுதா & அல்லுடு ரகுநாத் 

WISH YOU HAPPY 20th   ANNIVARSARRY

கடந்த காலம் கற்பனையாகட்டும்.
கனவுகள் (யாவும் ) நனவாகட்டும்.
நிகழ்காலம் நிஜமாகட்டும்.
நிறைசெல்வம் நிலைத்திட
நிமலனடி போற்றி.
எதிர்காலம் என்றும் ஏற்புடையதாக, (ஏற்றமுடையதாக)
எல்லையில்லா ஆனந்தம் எதிர்கொள்ள (நிலைத்திருக்க)

எம்பெருமாள் அருள் வேண்டி என் நல்லாசிகள்.

Monday, January 18, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Anandaradje Auguste & Niranjana Anand

Anandaradje Auguste 
Wish You Happy Anniversary to Ananth & Niranjana Anand

ஆனந்தத் திருக்கோலம்
ஆறாண்டுகள் கழிந்தாலும்
அலையலையாய் நினைவுகள் – வற்றாத 
ஆறாய் மகிழ்வுகள் பெருக்கெடுக்க,
அனைத்து நலன்களும்
அளவிலா வளங்களும்
ஆண்டவர் அருளாலே
ஆசிராய் நிலைத்திருக்க,
அழகான குடும்பமுடன் 
அருமையான வாழ்வுத் தொடர,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்
பாசமுடன் உம் இருவரையும்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ஆனந்த், நிரஞ்சனா தம்பதியரே.

இவண்,
அப்பா, அம்மா

சோபி.

Tuesday, December 22, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் -Liyakath Ali




துணையோடு இணையாய்.
இளமையோடு இனிமையாய்
சுவையான வாழ்வாய்
சுகமோடு மேலும்
திருமண வாழ்விலும்
நூறாண்டை நலமுடன் கடக்க,
ஆண்டவர் அருள்
அணைத்துமைக் காக்க.
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
மகிழ்வுடன் நாங்கள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய நண்பரே.      

Friday, November 27, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் -Thiyagalakshmi Badri & Venkatesh Badri Babu

இறை தந்த செல்வமாய்
இணைந்திந்த வாழ்க்கை
இருவருக்கும் துணையாய்
ஈன்ற செல்வம் இரண்டாய்.

உல்லாச வாழ்க்கை
வாழ்விலே நிலைத்து,
உலகமதை சுற்றி
வானிலே பறக்க,

வளமும், நலமும்
வற்றாத  நதியாய்
வேங்கடரசன் அருளால்
கரைப்புரண்டோட,

எந்நாளும் நீங்கள்
ஆனந்தத்தில் திளைக்க,
மனம் கொண்டு வாழ்த்தினோம்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

 10/06/2015 

Monday, October 26, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Mr.Suresh & Mrs.Hemalatha 2015


பென்ட்லி ரோஜுலு ஆசிர்வாதமு கொடுகு சுரேஷ், கோடலு ஹேமலதா.

நாட்கள் ஒவ்வொன்றாய், நகர்ந்தது வேகமாய்.
வாரிசுகள் இரண்டோடு, வருடங்கள் பத்தாய்.
திரும்பிப் பார்க்க தேவையின்றி, தித்திக்கும் நாளின்று.
,இறையருள் உமையுயர்த்த, நலமோடு நாள்தோறும்
மகிழ்வான நிலையோடு, கழியட்டும் நாட்களினியும்
இணையோடு இணைந்து என்றும், இனிக்கட்டும் குடும்ப வாழ்க்கை. 


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சுரேஷ், மருமகள் ஹேமலதா

Wednesday, September 9, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - ஸ்ரீ.சத்தியநாராயணன் & ஸ்ரீமதி.சுபாஷினிநாராயணன்



காலம் கடந்த வேகமதை
நினைத்து திரும்பி பார்க்கிறேன்,
கண்கொள்ளா காட்சியான
திருமணக் கோலமதை.

கைக்கோர்த்த நாளினிதில்
நல்லருள் அவனருள,
மகிழ்வுடன் அத்தனையும்
கடக்க வேண்டும் நலனுடனே.

உமதாசிகள் நீங்காமல்
என்றுமே எமக்கிருக்க,
உம் பாதங்களில் பணிந்தோம்
வாழ்த்துரைக்க வயதின்றி.

இருந்தாலும் உரைத்தோமே
எம் மனம் மகிழ, நாவினிக்க.
இனிய திருமண நாள்

நல்வாழ்த்துக்கள் பாவா, அக்கா.  

#சென்ற செப்டம்பர் 2, 2015   

Sunday, August 23, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - சிவசங்கர் & பத்மஸ்ரீ 22/08/2015

சில்லென்ற காற்று
உடலினை தழுவ,
குளிரும்(ர்ந்தது ) உள்ளம்
நினைவுகளில் ஓடி.

தூரலில் நனைந்த
பசும்புல் நிலையாய்,
அந்த சுகமோ
புதிதாய் இருக்க.
சிலிர்க்கும் இன்றும்
விழியின் சாடையில்.

இறைவன் அருளால்
நலமுடன் வாழவும்
இனிய திருமணநாளில்
நாங்களும் வாழ்த்தினோம் ,
என்றும் நீங்கள் இனிமையாய்
இளமையுடன் திகழ.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ஜோடியே.

Tuesday, July 21, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - இலங்காதிலகம் - வேதநாயகாம்பாள். (Vetha Langathilakam)



Vetha Langathilakam

இலங்காதிலகம் - வேதநாயகாம்பாள்

ஆறேட்டைத் தொட்டதோ?
கடந்ததோ இல்லறம்,
இரண்டற கலந்து,
இமயமாய் உயர்ந்ததோ?

வாழ்விலே வசந்தம்
இளமையாய், இனிமையாய் aதிகழ
அண்டியிருக்கும் அவனருள்
ஆசிர்வதிக்கட்டும் என்றுமே உமை.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வேத இலங்காதிலகம் அம்மையே.



Friday, June 5, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன்






27ஆம் மணநாள் (05.06.2015). 

சற்றேன்ன சற்று
சாறுபோல் என்றும்
சந்தோச வாழ்வை
சரவணன் உமக்கருள,
சாற்றுவோம் பாவதனை
சாஸ்டாங்கமாய் பணிந்து.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பாவலரே.

Friday, April 17, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - A.M.பத்ரி நாராயணன் ( தவப்புதல்வன் ) & ஸ்ரீமதி.B.ராஜராஜேஸ்வரி



இன்று எங்கள் 34வது வருடதிருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.

இனியவளே இன்று நமக்கு திருமணநாள்.
உமக்கு  திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி 



என்னவளே, உன்   நினைவுகளோ
நித்தமும் ஆட்சி செய்ய,

ஆரவாரமின்றி கழிகிறது
நாட்களது விரைவாக.

உரிமையென ஆனதினால்
உள்ளத்தையே பறிக்கொடுத்தோம்
விந்தையாய் இருக்கிறது
நாட்களது வருடங்களாய்
கணக்கிலது கூடியதை  நினைக்கையிலே

மயங்கித்தான் கிடக்கிறது
நினைவுகள் அத்தனையும்

உம் சேவைக்கு அளவுண்டோ
விரிவாய்
சென்றுக் கொண்டிருக்கையிலே.

பிரார்த்திப்பேன் இறைவனிடம்
எந்நாளும் நீ இன்புற்றிருக்க,

எவ்வாறு நன்றியுரைப்பேன் படைத்தவனுக்கு
உமை என்னவளாய்  கொடுத்ததற்கு


இனியவளே இன்று நமக்கு திருமணநாள்.
உமக்கு   இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி




#நான் சொல்லிலே காட்ட
 அவரோ செயலில் காட்டினார்
  ''விருந்து படைத்து''




Sunday, April 12, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Murali Kasipadhi & Shobana Badri



Murali Kasipathy &
Shobana Badri

வீதியெங்கும் தோரணங்கள்
பட்டாடைகளுடன் சலசலக்க,
பவனியோ வாகனத்தில்
பரவசமுடன் தொடர்ந்திருக்க,
அத்துடன் நினைவுகளும்
தொடர்ந்ததே இணையாக.

காலமது மகிழ்வாக,

கடந்ததோ நிறைவாக,
வளர்பிறைகள் வானத்திலே,
வந்தனைக்கட்டும் நெஞ்சத்திலே,

குலதெய்வம் அருள் புரிய,

குதுகலமாய் நாட்கள் கழிய,
கொண்டாடும் நிலையாக,
நித்தமும் மகிழ்வாக,

நலனும் வளனும்

நாடி வந்து தோள் கொடுக்க,
உம் குடும்பமது சிறக்கவும் 
உயர்வாய் நீங்கள் வாழவும்,
நல்லாசிகள் வழங்கினோம்.


முன்கூட்டியே
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இளம் தம்பதிகளே.

Wednesday, March 25, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்



அன்று முதல்  
 இன்று வரை 
புதிய உறவுடன்
புன்னகை  நினைவுகளுடன் .
உருண்டோடியதோ வாழ்க்கை   
உருண்டோடிய  காலமுடன்.

நீங்கா நலனுடன் ,
 நிறைவான மகிழ்வுடன்
இறைவனின் அருளால் 
பல்லாண்டுகள்  தொடர்ந்து
இணையாய் வாழ
இனிய  திருமணநாள்   நல்வாழ்த்துக்கள்  நண்பரே.

Friday, March 13, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Shri A P Irungovel








Shri A P Irungovel


 சூடிய நாள் முதல்
சுவைக் கொண்ட வாழ்க்கை
சற்றுமது குறைவின்றி

சங்கீதமாய் தொடர,
பிரார்த்தித்து வாழ்த்தினோம்
உமக்கென என்றே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Friday, October 24, 2014

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Su Po Agathiyalingam





நாளும் பொழுதும் விரைவாக
நடந்ததே  விரைவான  நொடிகளாய்
நாட்களோ ஒவ்வொன்றாய் கரைந்து விட
நகர்ந்து விட்டதே 23 வருடங்களது.
நடந்ததை நினைத்துப் பார்ப்பதிலும் சுகமுண்டு.
நடக்க வேண்டுமென எண்ணுவதிலும் சுவையுண்டு.
நகர வேண்டும் இறைவன் துணையோடு.
நலமோடு வாழவே அருள  வேண்டும்.
 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



‪#‎தோழர்‬ சு.போ.அகத்தியலிங்கம் அவர்களின் 23வது திருமணநாளை முன்னிட்டு 

பதித்தித்துள்ள இவ்வாழ்த்தில் இருவருக்குமிடையான அனைத்து நண்பர்களையும் 

இணைக்க முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் 

நண்பர்கள் அனைவரும் வாழ்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.