😭😭😭
இரண்டும் உயிரிருந்த மெய்களடா.
ஒன்று வெட்டுண்டு கிடக்க,
மற்றொன்று சுடப்பட்டு கிடக்க,
வெட்டுண்டு கிடந்தாலும் மரங்களடா,
மற்றொன்றோ உயிரிழந்த மனித பிணங்களடா. 16
மரமதற்கு மதிப்பொன்று இருக்குதடா.
மனிதன் மரித்தாலோ ஒரு பயனுமில்லையடா.
அறுக்கப் போனவர்கள்,
உலக, உறவு விட்டு
அறுப்பட்டு போனார்களடா.
உயிர் துறந்து
பிணங்களாய் ஆனார்களடா. 33
பிழைப்புக்கு எத்தனையோ வழிகளடா
அத்தனையும் துறந்தார்களடா.
பொல்லாத ஆசையாலடா
அகப்பட்டு மாண்டார்களடா.
துண்டுகளாயினும் மரத்திற்கோர் மதிப்புண்டு,
மரணித்த மனிதனோ மண்ணுக்கும் பாரமடா. 49
பலி கொடுத்தவர்கள் வல்லவர்களடா.
பணத்திற்காய் பலியானோர் பரிதாபமானவர்களடா.
சட்டமென்று ஒன்று இருக்குதடா.
அதை மதிக்க வேண்டுமடா. 61
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M. 🙏