Translate
Monday, November 7, 2011
திருஷ்டி
Sunday, October 16, 2011
இணைந்த உள்ளங்களுக்கு திருமண வாழ்த்து.
மணமகள்:- சௌ.சரண்யா மணமகன்:- S.K.விக்னேஷ்குமார்
மணநாள்: 30-09-2011 வெள்ளிக்கிழமை.
இடம்:- ஸ்ரீ வாசவி மஹால், நாமக்கல்.
இறைவனின் அருளால் இன்றைய நிகழ்ச்சி
இருமனம் இணையும் இல்லறத்தின் முதல் நாள்.
சங்குக்கழுத்து உடையவளோ
சந்தித்த நொடிப்பொழுதே
சந்தோச மனமுடனே
சம்மதித்து தலையசைத்தாள்
சரஸ்வதியின் பெண்ணிவள்.
தோழியர் புடைசூழ,
தொகைமயிலாய் மங்கையிவள்
அன்னம் போல நடைப்பயில
மங்கையிவளைக் கரம் பிடிக்க
மாப்பிள்ளையாய் உருவெடுத்து
மது உண்ட வண்டாக
மங்கை நினைவில் அவனிருந்தான்.
அரங்கம் முழுதும் அலங்கரித்து
சாத்திரங்கள் முடிவு செய்து
சான்றோர் அவை முன்னிருக்க
சரண்யாவைக் கைப்பிடித்தான்
சாகரத்தில் முத்தெடுக்க.
பட்டாபியின் மகளிவளோ
மங்கலக் குரலோசை
மண்டபத்தில் எதிரொலிக்க
பட்டமதைப் பெற்றுக் கொண்டு
மகாராணி ஆனாளே
மங்கள நாண் பூட்டிக் கொண்டு.
விக்னேஸ்வரனின் அருளுடனே
விக்னேஷ்குமார் துணையுடனே
வாழ்க்கைக்கடலை சிறப்பாக
வாசமடைய செய்வாளே.
பலமான உறவுகள்
பாலமாய் விளங்க,
சான்றோர் வாக்குகள்
வாழ்விலே பலிக்க,
இனிதான நினைவுகள்
விசாலமாய் படர,
நலமும் மகிழ்வும்
வளமுடன் இணைந்து,
பேரும் புகழும்
நிலையாய் உயர,
வாழ்த்துக்கள் எல்லாம் உரமாக,
வாழ்க்கை முழுதும் சிறப்பாக,
வாழ வேண்டும் செழிப்பாக,
வாழ்த்தினோம் நிறைவாக.
அன்புடன்,
மாமா தவபபுதல்வன் @ A.M.பத்ரிநாராயணன்,
மற்றும்,
தாத்தா P.A.மாணிக்கம் செட்டியார் மற்றும் குடும்பத்தினர்.
பின்குறிப்பு:- எமது நாமக்கல் சகோதரி திருமதி.சரஸ்வதி பட்டாபிராமன் & மாமா திரு.பட்டாபிராமன் அவர்களின் செல்ல(வ)ப்புதல்வி சௌ.சரண்யாவின் திருமண வாழ்த்து மடல்.
Sunday, September 11, 2011
தமிழாசிரியர் திரு.இராமலிங்கம்
புதிய உலகமாய்
புகுந்த ஊரும்
புதிதாய் தெரிய,
வாழ்க்கை நெறியை
வழக்கமான வழிக்கு
வகுத்துக் கொள்ள
நடப்பு செயல்களை
நாடினோம் முடிக்க .
புகுந்த இடத்திலும்
புதிதாய் அறிமுகம்
பலவாய் இருக்க,
அதிலே ஒன்று
அத்தியாய் இருக்க
ஆடிக் காற்றாய்
மனத்திலே மகிழ்ச்சி
விரிந்தே வீச
எம் தமிழ் ருசிக்க
மனமென்ற நிலத்தில்
குரு என்ற நிலையில்
தமிழெனும் (செந்தமிழ்) விதையை
தரமாய் பதித்து
தழைத்திட செய்த
ஆசிரியப் பெருந்தகை
அறிமுகமானார் நண்பராய் எமக்கு.
-தவப்புதல்வன்.
Wednesday, June 29, 2011
ஓட்டமாய் - R.S பிறந்தநாள் வாழ்த்து 2011,
இப்படியும் ஒரு வாழ்த்து
செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.
மஞ்சத்தில் இணையாக
மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.
#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன்
Tuesday, June 28, 2011
கருத்திலே கொள்ளவில்லை
இடையிலே ஏன்
ஏங்கும் கடலலைகள்.
பெருங்கடலின் கவியலைகள்
உம் கால்களைத் தொடவில்லையா?
உணர்வுக்கு எட்டவில்லையா?
கவனத்தை ஈர்க்கவில்லையா?
உம் தீண்டுதல்களின்றி
திரும்புகிறது அலைகளோ ஏங்கி.
கால்களால் அளைந்தால்
பூபாளம் பாடும்.
கைகளால் இறைத்தால்
களிப்படைந்து துள்ளும்.
அலையின் மீதே- உன்
விழி பட்டால் போதுமே,
விரைந்து (துள்ளி) வருமே
உம் கால்களை அணைக்க.
Wednesday, June 22, 2011
வேசமிட்ட நண்பன்
காற்றாய் மறைந்தான்
கண்டேன் அவனை
கலந்தது கண்கள்
கவர்ந்தது மனமே.
காதலனாய் ஆனவன்
கணவனாய் மாற,
கடிமணம் புரிந்தோம்
கலந்தோம் வாழ்விலே.
கற்பூரமாய் கரைய
கடந்தது நாட்கள்.
காண்பவர் ஏங்க
காதலில் மிதந்தோம்.
கட்டிய தாலியோ
காயும் முன்னே,
கட்டியவன் உரிமை
கருவாய் இருக்க,
காதலனாய் திகழ்ந்த
கணவனவன் உயிரை,
கவர்ந்து சென்றான்
காலனவன் வந்தே.
கதி கலங்கி போனேன்
கண்களோ இருட்ட.
கண்டவர், கண்கள் பட்டது போல,
கருகியது வாழ்க்கை
முளை விட்டப் போதே.
முழுமதியாளனை
மூப்பில்லா தலைவனை,
முன்தள்ளிய வயிற்றுடன்
முன்பொட்டை இழந்தேன்.
கொடும்பாவியாய் எனை நினைத்து
கொடுத்தானோ தண்டனையை.
கொஞ்சிக் கொஞ்சிப் பேசினோம்
துள்ளி விளையாடினோம்
கொடுப்பினை இல்லையே
கோபுரமாய் நிலைத்து வாழ.
அவணியில் புகழ் அடைந்திடவே
அவன் நினைவாய் பெற்றெடுப்பேன்.
என் உழைப்பும்
மகன் புகழும்
அவனுக்கு சமர்ப்பிப்பேன்
அவன் ஆத்மா சாந்தியடைய.
Monday, May 23, 2011
எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......
உன்னிலே உதித்த போதே
உறவுகளின் தொடக்கமம்மா.
மாதங்கள் பத்து சுமந்தாயே,
மரணத்தை நொடி பத்தில் அளித்தாயே.
பெண்ணாய் நீ இருக்கையிலே,
பெண்ணெனை காக்க மறந்தாயே.
உனை வளர்த்த உதிரத்தை
எனக்காக நீ கொடுத்தாய்.
உன் உதிரம் நானென மறந்து,
உதிர்த்துத்தான் விட்டாயே.
உனக்கிருக்கும் ஆசைத்தான்
எனக்கும் தான் இருக்காதோ.
காமத்திலே உமை இழந்தீர்.
காப்பதற்கு எமை மறந்தீர்.
அறியாமல் நாங்கள் உதித்ததிற்கு
அழித்தீரோ எமை, தண்டனையாய்.
{அளித்தீரோ எமக்கு தண்டனையை.}
பெற்றோர் உரிமையென நினைத்து
பெரும்பாவி ஆனீரே எமைக் கொன்று.
அப்பாவிகளாய் உம் கருவில் உதித்ததினால்
பெருந்தண்டனை அடைந்தோமே.
பாலோ வெளுத்திருக்க,
உம் மனமோ கருத்திருக்க,
பாலிலே நெல் கலந்து
பறித்தீரோ எம் உயிரை.
புண் தீர்க்கும் மருந்தாக
கள்ளிப்பாலிருக்க,
உயிர் போக்கும் மருந்தாக
கொடுத்தீரே எமக்குத்தான்.
நீச்சலறியா எம்மையும்
நீரிலே மூழ்கடித்தீர்.
மண் வாசனை அறியுமுன்னே
மண்ணிலே ஏன் புதைத்தீர்?
நாற்றமென எமை நினைத்தோ
குப்பையிலே வீசிச் சென்றீர்.
கொஞ்ச வேண்டிய எமை
கொடும்வெயிலில் போட்டு சென்றீர்.
மூச்சடங்கி போகவென
மூட்டைக்கட்டி போட்டு சென்றீர்.
மேடுபள்ள வாழ்வென என நினைத்து
தோண்டினீரோ பள்ளமதை நீர் எமக்கு.
முள்ளிலும் கல்லிலும் காயம் பட்டு
எறும்புகளும் பூச்சிகளும் எமை ருசிக்க,
உணவென எமை நினைத்தே
நாய்களும் கடித்துதற,
காத்துக் கொள்ள வழியின்றி
கதறித்தான் துடித்தோமே.
பசிப் போக்கும் பால் வேண்டி
குரல் கொடுத்தேன் அம்மாவென.
அம்போவென போட்டு சென்றீரே
எமை விட்டு வெகுதூரம்.
இறைவனிடம் பிறவி கேட்பேன்
இப்புவியிலே மீண்டும் பிறக்க.
வரமதை வேண்டி நிற்பேன்
உம் உயிரை எம் மடி சுமக்க.
கொஞ்சி நான் மகிழ்விப்பேன்
நான் இழந்த சுகத்தையெல்லாம்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சேர்த்துத்தான்,
உறவுகள் அனைவரையும் இணைத்துத்தான்,
சொல்ல விரும்புகிறேன் ஒன்றைத்தான்,
செவிக் கொடுத்துக் கேளுங்கள் இதையும் தான்,
கொல்லவென்றே சுமக்காதீர் எமையும் தான்.
உடல்பசி ஆறவென்றே நீர் இணைந்தீர்
உண்டான எமை அழிக்க ஏன் துணிந்தீர்?
இனிய பெற்றோராய் நீர் விளங்க,
உம் செல்லங்களாய் நாங்கள் வளர,
யோசிப்பீர் இணையுமுன்னே எமைத் தடுக்க.
தீட்டாதீர் திட்டங்களை எமை அழிக்க.
அழிக்கவே கருவுகளை சுமக்காதீர்,
இயற்கையின் நடப்பென்றே ஏற்பீரே.
விருப்பமின்றி உதிப்பதை தடுத்திடவே
முறையாக செயல்பட்டு தடுப்பீரே.
ஐய்யகோ.........
எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......
Tuesday, May 17, 2011
எப்படி... எப்படி?
Saturday, May 14, 2011
அன்பு தோழி சத்யபாமாவுக்கு நன்றி.
வான்வெளியில் நாடு கடந்து
கைப்பேசி ஒலி வழியே
ஆனந்தமாய் ஒலித்தது
வாழ்த்துக்களை கூறிடவே.
நட்பு என்ற நிலையாலே
நாடு கடந்த வாழ்த்திது.
ஆர்பரிக்கும் கடல் போல
ஆவலாலே அதிர்ந்தது.
மடைதிறந்த வெள்ளம் போல
மகிழ்ச்சியாய் பாய்ந்தது.
அருவியில் நனைவது போல்
ஆனந்தமாய் இருந்தது.
உணர்வுகளை வெளிக்காட்ட
வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.
உன்னத நட்பொன்றை
அறிந்துக் கொண்டேன்
உம் குரலின் ஒலியாலே.
நன்றி பகர வார்த்தையின்றி
மகிழ்வுகளைப் பகிர்ந்துக் கொண்டேன்
தோழி உமக்கு யான்.
-தவப்புதல்வன்.