காண வந்த உன்னிடம் மறைந்து போனேன்.
ஏக்கத்தில் நீயோ திரும்பிப் போனாய்.
உன் ஏக்கம் கண்டு குலைந்துப் போனேன்.
வார்த்தைகளின்றி வதங்கிப் போனேன்.
என் நிலை உனக்கு எப்படி சொல்வேன்.
மீண்டு நான் தேடி வந்தேன்
மீண்டும் வருவாயா, எனைப் புரட்டிப் பார்க்க?
நிலையில்லா இக்காலமிது
நீட்சி கொடுத்திருக்கு காலம் நமக்கு.