Translate

Showing posts with label கலாச்சாரம். Show all posts
Showing posts with label கலாச்சாரம். Show all posts

Friday, December 26, 2008

பண்பாடு

நம் கூட்டுக்குடும்ப உயர்வதனை
உணர்ந்தாரே மேல்நாட்டவர்.
போற்றி வணங்கி
ஏற்கின்றார் இந்நாளிலே.

கலாச்சார கழிவென்று
அவர் நாட்டிலே,
ஒதுக்கியதை நாடுகிறார்
நம் நாட்டிலே.

சொல்லித்தான் தெரிவதில்லை
மன்மத கலையே.
முன்னோரவர் வரையறுத்தார்
நம் நாட்டிலே.

பட்டப்படிப்பு பாடங்களை
சோதித்து அறியலாம்.
சோதித்தறிந்த பாடங்களை
ஏற்றும் கொள்ளலாம்.

சோதனைகள் பல செய்து
அறிந்துக் கொண்டார்கள்.
அவர்கள் வாழ்வு சோகமென்று
புரிந்துக் கொண்டார்கள்.

வாலருந்த நரியாக
மாற வேண்டாமே.
பட்டறிந்தவர் பாடங்களை
ஏற்றுக் கொள்ளுவோமே.

வாழ்வு தரும் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள்
கழிவான வாழ்வுதனை
ஒதுக்கித் தள்ளுங்கள்.

மிருகத்துக்கும் மனிதனுக்கும்
வேற்றுமை உண்டு.
புரிந்து கொண்டு வாழ்வோமே
மனத்திலே கொண்டு.

கழிவுகளைப் பூசிக்கொண்டு
கதற வேண்டாம்.
வாலறுந்த நரியாக
அலைய வேண்டாம்.

கூட்டுக்குடும்ப வசதியினை
உணர்ந்துக் கொள்ளுவோமே.
கூடி வாழ்ந்து பெருமைதனை
நாட்டிக் கொள்ளுவோமே.

இளமையிலே புதுமையென்று
ஆட்டம் போடாதே.
முன்னோர் கொடுத்த புதையலையே
நாசம் செய்யாதே.

மூத்தவனாய் நானுமிருந்து
சொல்லிக் கொடுக்கின்றேன்.
விளைநிலத்தை அழித்து நீயும்
வீனாய் போகாதே.

சீராக வைத்திருந்தால்
கணனி என்றுமே,
சிறப்பாக இருக்குமென்று
நீ அறிந்தது தானே.

சீராக அமைத்துக் கொண்டால்
வாழ்வுதனையே,
நலமாக வாழ்ந்திடலாம்
நீயுமே அறியாயோ!

சாதனைகள் பல புரிய
நம் நாட்டிலே,
நல்லவைகள் பலயிருக்கு
வாழும் வாழ்விலே.

கேடுகெட்ட நினைவுகள்
வேண்டாம் மனத்திலே.
உயர்வான எண்ணம்
வேண்டும் உன் செயலிலே.

இருக்கின்ற நல்லதை
தேடிப்பெறுவாயே.
திட்டங்களை செய்ததை
மேன்மை அடைவாயே.

பஞ்சமில்லா......


மோசடி ஆண்களுக்கும்,
மோசமான பெண்களுக்கும்
கிடைத்ததே வாய்ப்பு
பொன்னான வாய்ப்பு.

நீதியாய் கிடைத்ததே
சட்டங்களில்லாமலே.
மேலைநாட்டு நாகரீகம்
பாதுகாப்பாய் நுழைந்தே.

'' லிவ் இன் ரிலேசன்ஷிப்''
என்ற உறவு வந்ததே.
பாரத்தின் பண்பாட்டை
ஒழிக்கத் தான் வந்ததே.

மோதிரமும் தேவையில்லை,
தாலிக்கும் வேலையில்லை,
''தலாக்''குக்கும் வழியில்லை,
உறவுக்கும் முறைக்கும்
இனி தான் சோதனையே. 

இருவரிடை மட்டுமே
விருப்பம் இருந்தால் போதுமே.
காத்திருக்க தேவையில்லை
தாளிட்டுக் கொள்ளலாம்.

தேவையின்றி போனாலே
திறந்து விட்டு போகலாம்.
மற்றொன்று கிடைத்தாலே
தள்ளி விட்டும் மூடலாம்.

சேர்ந்திருந்த காலத்துக்கு
அத்தாட்சி தேவையாம்.
இது மட்டும் சட்டமாம்
காக்கவென்று வந்ததாம்.
பெண்களுக்கு பாதுகாப்பாம் 
ஆண்களுக்கு இரும்பு காப்பாம்.

கழிசலான நிலையை வைத்து
பணம் நிறைய பார்க்கலாம்.
மிரட்டி, சுருட்டி வாழ்பவரோ
வளமையாக வாழலாம்.


பின் குறிப்பு; இன்றைய 23\ 12\ 2008 சென்னை தினமலர் 
   நாளிதழில், '' லிவ் இன் ரிலேசன்ஷிப்'' பற்றி செய்தி வந்திருந்தது.
 திருமண சடங்கு முறையின்றி சேர்ந்து வாழ சட்டமியற்றவோ, 
  அனுமதி வழங்கவோ இயலாது. ஆனால் அப்படி வாழ்கின்ற 
  பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று பார்லிமெண்டில் ஒரு எம்.பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் மேற்படி பதிலை அளித்துள்ளார். அந்த செய்தி படித்ததின் தாக்கமிது.