காணமல் போகுதம்மா.
கயவர்களின் செயலாலே
கட்டடங்களாய் ஆகுதம்மா.
*கண்டபடி அழிப்பதாலே
வான்மழையும் மறையுதம்மா.
பனிமலைகளும் கரைவதாலே
பாறைகளாய் தெரியுதம்மா.
*பரந்திருந்த பசுமைநிலம்
பாலைவனமாய் மாறுதம்மா.
பாவப்பட்ட மனிதர்களோ
பரிதவித்து நிற்கையிலே,
பாவிமகன் இவன் மட்டும்
புரள்கின்றான் கோடியிலே.
*செலவின்றி கிடைத்த நீரை
செல்லரித்து போக விட்டான்.
செலவழித்து ஊரையவன்
செழிப்பாக்கப் பார்க்கிறான்.
*ஆறிவற்ற செயலாலே
ஆற்றையவன் காக்காமல்,
நன்னீராய் கிடைத்ததை
உப்புக்கடலில் கலக்க விட்டான்.