Translate

Showing posts with label வாழை தோப்பை காக்க.... Show all posts
Showing posts with label வாழை தோப்பை காக்க.... Show all posts

Friday, October 18, 2013

வாழை தோப்பை காக்க..., வாழ்த்துவோம் நண்பர்களே!,



வாழை சாகுபடியில் நீர் தட்டுபாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட இருக்கும் பெரும் சவால், வேகமான காற்றிலிருந்து வாழை மரங்களை காப்பதுதான். இதில்தான் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்படும்.

பருவக்காற்று வீசும் காலங்களில் கம்புகளால் முட்டுக் கொடுப்பது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது போன்றவற்றை செய்து வாழை மரங்களைக் காப்பது வழக்கம். இருப்பினும் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடும். 

கடலோர பகுதிகளில் வீசும் காற்றைத் தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும் பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். அதேமுறைப்படி வாழை மரத்தோப்புகளையும் காக்க எண்ணியே, வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ளார், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சியாளர் . புவனேஸ்வரன்.

வீரிய ரக சவுக்கு:

10க்கு மேற்பட்ட உயர் ரக சவுக்கு மரங்களிலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' முறையில் தாவர இனப்பெருக்கம் முறையில், "காசுரினா ஜூங்குனியானா" என்ற வீரிய ரக சவுக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பயன், பயன்படுத்தும் முறை:

இந்த ரக சவுக்கை வாழைத்தோப்பின் நான்கு திசைகளின் ஓரத்திலும் மூன்று வரிசைகளாக ஒரு மீட்டர் இடைவெளியில் குறுக்கு மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை 46 சதவீதமும், மண் அரிப்பை 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும் தோட்டத்தி தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. இச்சவுக்கு மரம் மூன்று ஆண்டுகளுக்கு பயன்படும். பின் சவுக்கு மரங்களை அறுவடை செய்வதின் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.

தொடர்பு கொள்ள: 0422 - 2484100

**வாழைத்தோப்புகளைக் காக்க, வீரிய ரக சவுக்கு மரங்களைக் கண்டு பிடித்த மர ஆராய்ச்சியாளர் புவனேஸ்வரன் அவர்களை வாழ்த்துவோம், நண்பர்களே.