Translate

Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Monday, September 10, 2007

பாரதியார் நினைவு நாளில் கவிச்சிந்தனை !

சிந்தனையில் சிறுபொழுதே
சிக்கியிருந்த வேலையிலே
நினைவினிலே வந்தாய்.
நினைத்துனைப் பாட
எழவில்லை நாவும்
எழுத்திலேக் கொட்ட
எட்டாக் கனியாய் நீயும்
ஏந்திய கையாய் நானும்.
கவிதைக்கு நீயும் ஒரு அரசன்
கவிதையிலே நானோர் ஆண்டி.
மழலைக்கு இல்லை மாற்று
அறிய செய்தது உன் கூற்று.
ஒன்றா, இரண்டா ஊட்டி விட்டாய்
எடுத்துச் சொல்லி உனைப் பாரட்ட.
உன் வாழ்விலே என்றும் துயரம்
இருப்பினும் கொடுத்தாய் வீரம்.
இன்றும் ஏனோ ஏறவில்லை
என்பதே துயரம்.
நல்லது செய்ய நினைத்திருந்தாய்
நலம்பட வாழ சொல்லிச் சென்றாய்.
நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்
அன்றே வேகா உன் நெஞ்சம்
என்னவாகுமோ நீ இன்று இருந்திருந்தால் !
என் எழுத்திலே வேண்டும்
உம் இதயம்.
உமையின்றி யார் தருவார்
வாழ்விலே சலனம்.
நினைத்துருகி நிற்கின்றேன்
உம் நினைவு நாளிதிலே.
பின் குறிப்பு:: கவி.பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11 ம் தேதி.