சென்ற 19 ம் தேதி சென்னையில் நடைப்பெற்ற எமது மகள் திருமண வரவேற்பில் வாசித்தளித்த வாழ்த்து மடல்.
இல்லற வாழ்விலே
இணைந்த உள்ளங்களுக்கு வாழ்த்து.
மணமகள்: மணமகன்:
நிரஞ்ஜனா ஆனந்தராஜ்
இரவும் பகலும்
வருவது போல,
மாற்றங்கள் உள்ள
வாழ்வை உணர்ந்து,
ஒருவருடன் மற்றவர்
ஒற்றுமையாய் இருந்து,
இணைந்த கைகள்
இணைந்தே இருக்க,
காலத்தையும் நேரத்தையும்
கருத்திலேக் கொண்டு,
ஈந்து வாழ்ந்தால்
இசையாய் அமையும்.
நட்பினால் தொடங்கிய
காதல் என்றும்,
காலம் முழுதும்
நட்புடன் இருக்க,
நவிலும் வார்த்தைகள்
இனிமையாய் அமைந்தால்,
நலம்பட வாழ்வும்
இன்பமாய் இருக்குமே.
ஆயக்கலைகள்
அறுபத்து நான்கு,
அதிலே ஒன்று
குடும்ப வாழ்வு.
வாழ்க்கை என்பது
பகட்டானது அல்ல,
குன்றிலிட்ட விளக்காய்
சிறப்பாய் ஒளிர,
சீராய்ந்து, கவிதையில்
மங்களங்கள் பொங்க,
மனமுவந்து வாழ்த்தினோம்
மகிழ்வுடன் வாழ்கவே!!!.....
இப்படிக்கு,
பாட்டனார்: மாணிக்கம் செட்டியார் .
அப்பா: பத்ரிநாராயணன்.
அம்மா: ராஜராஜேஸ்வரி.
தங்கை: சோபனா.
இடம்: சென்னை, பாரதி ராம் கல்யாண மண்டபம்.
தேதி : 19/01/2010