Translate

Saturday, January 23, 2010

மங்கள வாழ்த்து

சென்ற 18 ம் பாண்டிசேரியில் எமது மூத்தமகள் ஸௌபாக்கியவதி. நிரஞ்சனாவுக்கும், சிரஞ்சீவி. ஆனந்த் அகஷ்ட்க்கும் நடைப்பெற்ற திருமண விழாவுக்கு வாசித்தளித்த வாழ்த்துமடல் இதோ:


இல்லறத்தில் இணையும்
மனங்களுக்கு மங்கள வாழ்த்து.
மணமகள்: மணமகன்:
நிரஞ்ஜனா ஆனந்தராஜ்

இருவரின் மனமும்
பறந்தே அலைந்தது.
இணையும் இன்று வரையும்
படபடத்தே பறந்தது.

காதலொன்றே
மனத்திலிருக்க,
காலமும் நேரமும்
மாறுபட்டிருக்க,

உறக்கமும் விழிப்பும்
ஒன்றாய் இருக்க,
மயக்கமாய் தானே
அதுவும் கழிந்தது.

இருவரின் இடமும்
வேறாய் இருக்க,
இணையும் முடிவிலோ
ஒன்றாய் இருக்க,

வேறுப்பட்ட மனங்களும்
மாற்றங்களை உணர்ந்து,
வேற்றுமைகளை மறந்து.
மனமார வாழ்த்தியது.

இணைந்த உள்ளங்கள்
இணையும் வாழ்விலே,
இவ்வையகம் புகழ
இன்று போல் என்றுமே,
இன்முகம் மலர,
இன்சொல் உதிர்த்து ,
இல்லறத்தில் கலந்து,
இருவருடன்
இருவராய் மேலும் உயர்ந்து,
இன்பமாய் வாழ
இறையை பணிந்து,
இயம்புகின்றோம் வாழ்த்துகளை.


இங்ஙணம்,
பாட்டனார்: மாணிக்கம் செட்டியார் .
அப்பா: பத்ரிநாராயணன்.
அம்மா: ராஜராஜேஸ்வரி.
தங்கை: சோபனா.

இடம்: பாண்டிசேரி, ஆனந்தா திருமண நிலையம்.
தேதி : 18/01/2010

No comments: