Translate

Friday, January 15, 2010

இனிக்கட்டும் பொங்கல்.

செஞ்ஞாயிறு உதிக்க
செவ்வானம் ஒளிர,
செவ்விதழாய் மலர்ந்து
செந்தையும் பிறக்க,

செங்கரும்பு வளர்ந்து
இனிப்பைக் கொடுக்க,
செம்பால் பொங்கி,
பொங்கல் ஆகும்.

மங்கலங்கள் நடந்து
மகிழ்வுகள் ஆக,
நித்தமும் அதுவே
நிலைத்தே இருக்க,
இறைவனை தொழுது
இயன்றதை செய்வோம்.

No comments: