திட்டங்கள் முடிவின்றி
செயல்களில் வெற்றியில்லை.
ஒரு உரு கொடுக்கும்
காலந்தனை உணர்ந்தால்,
மனமது ஒப்பாது – நொடி
ஒன்றில் அழிக்க.
சிந்திய ரத்தங்கள் அளவுண்டா?
சிறைப்பட்ட காலத்திற்கு மீள்வுண்டா?
அடிப்பட்ட உடல்கள் (உயிர்கள்) கணக்குண்டா?
உயிர் தந்த உத்தமர்கள் எத்தனையோ!
அத்தனையும் உனக்கென நீ உணர்ந்தால்
உறுதியைக் கொள்வாய் உயர்வினை நோக்கி.
அகிலம் போற்றும் நிலையடைய,
இந்திய திருநாட்டு புகழது ஓங்க
அக்னி பறவையாய் நீ திகழ்ந்து
கனவுகள் காண்பாய் விழிப்பாக.
#ஒரு தாய் மக்களென திகழும் இந்திய திருநாட்டின்
உள்ளங்கள், உயிர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment