தவமிருந்த காலமெல்லாம்
மலையேறி போச்சுதையா.
தண்ணீரைத் தேடி - என்
கண்களும் பூத்ததையா.
மரத்தின் உச்சியிலே - நான்
அமர்ந்து பார்க்கின்றேன்.
எட்டிய தூரமெல்லாம்
நீரில்லா நிலையையே காண்கின்றேன்.
மீன் தின்ற காலமெல்லாம்
மீண்டும் என்று வந்திடுமோ
பசி தீர்க்க தேடி நான்
புழு தின்று வாழுகிறேன்.
குளம் குட்டை அத்தனையும்
கட்டடமாய் மாறிவிட்டால்,
குழிநீரில் மீனின்றி- எம்மினமும்
குழுக்குழுவாய் அழிந்திடுமே.
கொஞ்சி குழாவிய
குடும்பமது அழிந்ததினால்
வேதனையில்
தனியாய் நானும் வாடுகிறேன்.
நீங்கள் அறியா வண்ணம்
எத்தனையோ உதவிகளை செய்கின்றோம்.
பறவையினம் வாழ்ந்திடவே
மனத்தை நீங்கள் திறந்து வைப்பீர்.
தென்றலாய் உள்நுழைந்து - உமை
கவலையின்றி வாழ வைப்போம்.
No comments:
Post a Comment