தனம் தாங்கா இடையோடு
அசைந்தாடும் தேராக,
பவனி வரும் பேரழகை
ஓரவிழியில் பார்த்தபடி
வெண்முகில் மெத்தையிலே
அவன் கிடக்க,
பூங்கொடியாய் படர்ந்தாளே
பசலையால் துவண்டபடி.
காலமந்த சிறுபொழுதில்
ஆனந்த முனகலில்
நீர்த்துளி முத்துக்கள்
அங்கங்களில் உருண்டோட,
கரைந்ததே விழியிரண்டில்
கரு மையும் இணைந்தங்கு.
#எமது இக்கவிதை ஏற்று வெளியிட்ட Single Frame முகநூல் குழுவுக்கு நன்றி.
https://www.facebook.com/groups/359102730866118/permalink/694085150701206/?notif_t=group_post_approved
No comments:
Post a Comment