உதிரும் வார்த்தைகளோ
உண்மையே இதுவென
அறுதியிட்டு சொன்னால்,
வாய் மூடி நானும்
மௌனமாய் செல்வேன்.
புறந்தள்ளிய மனதோ
உறங்காமலிருக்கும்,
என்றேனும் ஒரு நாள்
சுட்டிக் காட்டும்.
அன்றிலிருந்து
அனுதினமும் உன்னை
அல்லாட வைக்கும்
அனல் பட்ட நிலையாய்.
உனக்கு நீயே
அந்நியனாய் மாறி.
உரைத்திடயியலா
நிலையிலன்று,
உள்ளும் வெளியும்
புழுங்கிப் போகும்.
No comments:
Post a Comment