கணக்கனாய் இருந்த என்னை
கற்பனையில் மூழ்க வைத்தாய்.
கணக்கெழுதும் காகிதத்தில்
கவியெழுத தூண்டி விட்டாய்.
கண் மூடிய அடுத்த நொடி
கனவு காண செய்து விட்டாய்.
கண் அகலாவண்ணம் - நீ
கடிவாளம் பூட்டி விட்டாய்.
கடவுளிடம் உனைக் கேட்டு
கடுந்தவம் செய்ய விட்டாய்.
கடைக்கண் சாடைக்காட்டி - எனை
கடையேற்றிக் கொண்டாயே.
இனி தடையேதுமின்றி
இன்பம் தாண்டவமாடுமே.
தளிர் இளங்கொடியாய் - நீயெனை
தழுவிக் கொள்ள
தாங்கிடுவேனே தளராமல்
தாலாட்டு ஆட்டியப்படி.
No comments:
Post a Comment