வின்னைத் தொடும் விலை கூறி
பிச்சைகளுக்கு குறைவில்லை.
ஆண்டி முதல் அரசன் வரை
கையேந்துகிறான் பிச்சைக் கேட்டு.
காரணங்கள் பலவிருக்க
குறி மட்டும் காசிலிருக்க,
பிச்சைக்கு விடிவேது
மனங்களது மாறாவரை.
முடிந்தவனும் கரக்கின்றான்
தருபவனை நோகடித்து.
ஒன்றுக்கு மதிப்பேயில்லை
அளவுக்கோ கணக்கேயில்லை.
பற்பல வேடங்களில்
பகலிலே பல்லிளித்து,
அம்மணமாய் திரிகிறது
இராப்பொழுது நேரத்தில்.
பிச்சைக்காரனும் கேட்பதில்லை
பழைய சோறு வேண்டுமென்று.
*அமுதமென ஊட்ட வேண்டும்
ஆதரவற்றோர் நிலையறிந்து.
ஏங்குகிறது மனமும் தான்
ஏக்கத்துடன் கரங்குவித்து.
No comments:
Post a Comment