Translate

Monday, November 27, 2017

சென்ரியூ வகை கவிதைகள் - 4



பக்கத்தில் இருந்த பழைய கட்டிடம்
ஓசையுடன் இடிந்து விழுந்தது
நகரத்தில் கட்டிய புதிய பாலம்

மண்ணுக்குள் புது கட்டிடம்
நினைத்ததைப்போல் புதைந்து போனது
அரசாளும் அரசியல்வாதி செய்த ஊழல்

போதை பிரியர்கள் அருந்தும் மதுவிலும்
அஞ்சாமல் கலப்படம் செய்கின்றனர்
மக்களின் உயிர் காக்கும் மருந்துகளிலும்
இரவில் தெரியும் வான் நட்சத்திரங்கள்
தொடர்ந்து மின்னி மகிழ்விக்கிறது
கூட்டமாய் பறக்கும் மின்மினி பூச்சிகள்

--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: