நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
தாய் - தனையன்
உருவத்தில் நீ
உடைசலில் நான்
லட்டு - பூந்தி
சுறுசுறுப்பாய் நீ
சுவையாய் நான்
எறும்பு - கரும்பு
முதலில் நீ
பிறகு நான்
பாகு - பர்பி
சீற்றத்தில் நீ
சிகை போல் நான்
நாகம் - நகம்
--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment