ஆரம்பம் நீ
முடிவு நான்
ஊடல் - கூடல்
எண்ணத்தில் நீ
எழுத்தில் நான்
கரு - கவிதை
உருவத்தில் நீ
உரைப்பதில் நான்
மென்மை - உண்மை
வனப்பில் நீ
சொல்லில் நான்
ஓவியம் - காவியம்
ஏற்க மறுக்கிறாய் நீ
ஏற்க மறுக்கிறேன் நான்
மதி -விதி
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment