பல வண்ணங்களை
வாணவில்லாக,
திரைசீலையிலே தீட்டி விட்டேன்
தூரிகையால்.
விலகி நின்று ரசிக்கையில்,
மனம் நர்த்தனமாடுகிறது
வண்ணக் கலவையில்
ஜொலிக்கும் உன் திருமுகம்.
உதடுகள் இணையாமலும்
விழிகள் விலகமலும்
வண்ணங்களும் தூரிகையும் இணைந்து
பிரம்மானாய் உனை படைத்ததை கண்டு.
--
ஆக்கம்: ✍️
தவப்புதல்வன்
No comments:
Post a Comment