எண்களால் கூடி
உயரத்தில் இருப்போம்.
எண்ணத்தால் இன்றும்
குழந்தையென சொல்வோம்.
மாசும் மருவும்
அன்று நமக்கில்லை.
இன்றோ நாம்
அப்படியொன்றும் இல்லை.
காயும் பழமும் - அன்று
விளையாட்டாய் இருக்க,
கோபதாபங்களால்
இ ன்று நாம் ஒதுங்கி செல்ல,
ஏக்கங்கள் அன்று
நிலையின்றி இருக்க,
ஆசைகள் இன்றும்
பெரிதாய் வாட்ட,
குழந்தை பருவமோ
விளையாட்டாய் செல்ல,
முதிர்ந்த வயதிலோ
சூதாட்டமாய் நடக்க,
பருவங்களை நினைத்தால்
புதிர்களாய் தெரிய,
முன்னோக்கி பின்னோக்கி
எண்ணங்கள் விரைய,
எண்ணிலா கேள்விகள்
எழுந்து நமை ஆட்ட,
கிடைக்குமோ விடைகள்
முடிவுக்கு முன்னே.
No comments:
Post a Comment