உறங்கும் நேரத்திலும்
உறங்காமல் இருந்தது.
விடியும் காலத்திலே
விழிக்க வைத்தது
காலை முதல் மாலை வரை
கடனென கழிந்தது.
மாலை பொழுதிலும்
மல்லுக் கட்டியது.
ஓடிய நேரத்திலும்
ஒட்டியே வந்தது.
இப்படியிப்படி என .
இழுத்துச் சென்றது.
மயங்கா என்னை
மயக்க வைத்தது.
உணவையும் உணர்வையும்
உதற செய்தது.
இயங்கிய என்னை, (ஏனோ)
இயங்காமல் செய்தது.
புரியாத புதிராய் எனை
புதைத்து விட்டது.
புல்லு முளைக்குமோ
புதையுண்ட இடத்தில்
பரிதாபம் வேண்டாமே
பாவமாய் எண்ணி.
No comments:
Post a Comment