நேருக்கு நேர்
குறுக்கிட்ட பொழுது,
சந்தித்த விழிகள்
ஒரு நொடியெனினும்,
சலனமற்ற பார்வையில்
பாவையோ நோக்க,
சரணடைந்த நிலையில்
ஒதுங்கினான் அவனும்.
பாவையவளோ தன்
வழி செல்ல,
தன்னிலை மறந்து
தவித்து நின்றான்.
இடையது ஒன்றும்
மெலிந்தது அல்ல.
பார்வைக்கு அவளோ
அழகியுமல்ல.
ஒப்பனைகளில் ஏதும்
கவர்ச்சியும் இல்லை.
இருப்பினும் அவன் மனம்
பறந்தது நாடி,
காதலென்ற மனமுடன்
எல்லையைத் தாண்டி.
வாழ்தல் என்றால்
இவளுடன் மட்டும்.
இறைவன் படைத்தான்
எனக்காக மட்டும்.
நினைத்தவன் கண்களோ
அலைந்தது தேடி.
No comments:
Post a Comment