நாற்றங்காலில்
நாற்றுகள் வளர்ந்திருக்க,
நடவிடும் வேளையிலே
நாரதனாய் நுழைந்தேனோ?
நற்சாலை நீரமைத்து
நாற்று நடவுகளால்
நல்லதொரு விளைசல் காண
நாடி வந்தேன் உமைக்காண.
நலமதை நீருணர்ந்து
நட்புடன் கரம் பிடித்தால்
நான்றிந்த செய்திகளை
நயமுடன் உமக்குரைப்பேன்.
--
உங்களுடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment