அழிவையும் புரிந்து - நீ
அழிந்து போனால்
அழியாது கறையாய்
அழுக்காய் உன் நினைவு.
செய்யும் செயல்கள்
செம்மையாய் முடித்து,
செழுமையாய் புவியை
செழிக்க செய்தால்
நிலையா இப்பூவுடல்
நீறுபூத்து போயினும்
நிலைத்து நிற்குமே
நின் புகழ் என்றும்.
உற்சாக ஊற்றுடன்
உறுதிபட செய்யின்
உருபெறுமே சாதனையாய்
உள்ளத்துள் மகிழ்வு பொங்க.
No comments:
Post a Comment