முன்பின் பார்த்ததில்லை.
முறையிட்டு நீயழுதாய்.
மூச்சு போகும்
நிலையங்கு
மூவ்வாயிரம் காக்குமென்றாய்.
முழுதாக நான் கொடுக்க,
மூன்றே நாளில்
திரும்புமென்றாய்.
மூன்று மாதம் கழிந்த
பின்னும்
முனையளவும் திரும்பவில்லை.
இப்படியொரு நிலையிலே
இங்கு வாக்கு கேட்டு
சிலரும் வந்தார்.
இருப்பெல்லாம்
உயருமக்கு
இருப்பையெல்லாம்
மாற்றிடுவேன்
கூறி அவர் பெற்றுச்
சென்றார்.
கூட்டம் சேர்த்து
ஓட்டுகளை.
கூட்டிப் பெறுக்க
ஆட்களின்றி
கூடியதோ குப்பைகள்தான்
துரோகங்கள் பலவிருக்கு
தூஊண்டிலிட்டால்
தாங்காது.
துணைக்கு ஆட்களிருந்தாலும்
தூக்கிவர முடியாது.
No comments:
Post a Comment